அண்ணா பல்கலையில்.. 'துப்புரவு பொறியியல்' துறை! முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிபிஎம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் புதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பெ.சண்முகம் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இன்று (16.10.25) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம் சின்னத்துரை மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை துவக்கி புதிய உபகரணங்கள் கருவிகளை உருவாக்கிட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற்றவர்களின் உரிமையை பறிக்கக் கூடிய விதத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பாதிப்புகளை சந்திப்பவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், வடசென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆபத்தான எரி உலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், கேபிள் டிவி தொழிலில் பழைய ஆப்ரேட்டர் பகுதியில் புதிய LCO போடுவதை உடனே நிறுத்த வேண்டும், தமிழ்நாடு கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் TCOA சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications