பப்ஜி மதன், மனைவிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்.. 1,600 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்.. போலீஸ் அதிரடி!
சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசி பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்று யூடியூபர் பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பப்ஜி மதன்
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இருவரும் ஆன்லைன் 'பப்ஜி விளையாட்டு மூலம் பல கோடிகள் சம்பாதித்ததும், சொகுசு கார், வீடு வாங்கியதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது. பப்ஜி மதனின் 2 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கணக்குகளும் பப்ஜி மதனின் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.

குண்டர் சட்டம்
இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த கிருத்திகா தனது கணவர் எந்த சொத்துக்களும் சேர்க்கவில்லை என்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார். தற்போது பப்ஜி மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நாட்களுக்கு முன்பு அறிவுரைக் கழகத்தில் பப்ஜி மதனும், அவரது மனைவியும் வாதாடினார்கள்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த நிலையில் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைமத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றபத்திரிகையில் முதல் குற்றவாளியாக பப்ஜி மதனும், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மதன் மற்றும் அவரது மனைவிக்கு மனைவிக்கு எதிராக 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பணமோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தண்டனை
நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிந்தவுடன் அந்த தகவல்களை வைத்து கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மதனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். ஆதாரங்களை வைத்து மதனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications