பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்! டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு வைத்த முக்கிய டிமாண்ட்!
சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட குஷ்பு, பெண்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தொடர்ந்து போராடுவேன் என்றும் விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் தாம் அஞ்சப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

குடும்ப வன்முறை உட்பட பெண்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், தன்னிடம் தாராளமாக தெரிவிக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு கடிதம் எழுதலாம், மெயில் அனுப்பலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டதாகவும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியுடனும் டிஜிபி அலுவலகம் சென்றார் குஷ்பு.
சைலேந்திர பாபு இல்லாததை அடுத்து ஏடிஜிபி சங்கரை நேரில் சந்தித்து பேசிய குஷ்பு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து கார் ஏறச் சென்ற குஷ்புவிடம் மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை வீசினர்.
அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக கூறிய அவர் மேற்கொண்டு அது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications