CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகள் என்னவென்பது குறித்து கண்காணிக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேரில், சி.வி.சண் முகம், சி.விஜயபாஸ்கர் இருவர் மட்டும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பவில்லை. மற்றவர்கள் திரும்பி விட்டனர்.

திமுகவில் இணைவதற்கு விஜயபாஸ்கர் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சி.வி.சண்முகமோ, எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதிக்காத்து வருகிறார். அவரது அமைதிக்குப் பின்னணியில் அவரது அண்ணனும் அவரது குடும்பத்தினரும் இருந்து வருகின்றனர்.

AIADMK Edappadi Palaniswami CV Shanmugam

அதாவது, எடப்பாடி மீது ஏக விமர்சனம் வைத்தவர் சி.வி.சண்முகம். குறிப்பாக திமுக ஆதரவுடன் நாம் ஆட்சி அமைக்கலாம் ; நம்மை ஆதரிக்க திமுக சம்மதிக்கிறது என்றெல்லாம் எடப்பாடி சொன்னபோது, அதை முதலில் எதிர்த்தவர் சண்முகம். அவர் துவக்கி வைத்த எதிர்ப்பு பேச்சு, அதிமுகவில் பல எம்.எல்.ஏ.க்களையும் எடப்பாடிக்கு எதிராகப் பேச வைத்தது. ஒரு கட்டத்தில், எடப்பாடிக்கும் சண்முகத்திற்குமிடையே கைகலப்பாக மாறும் சூழலுக்கு மாறியது. அருகில் இருந்தவர்கள் தடுத்து விட்டனர்.

அதன்பிறகு நிறைய அரசியல்கள் நடந்தன. விஜய் அரசை எதிர்த்து எடப்பாடியின் எதிர்பாளர்கள் வாக்களித்தது, எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சபாநாயகரிடம் எடப்பாடி புகா கொடுத்தது, எதிர்பாளர்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை முதல்வர் விஜய் நிறைவேற்றாததால் அவர் மீது எதிர்பாளர் கள் கோபமும் அதிர்ப்தியும் அடைந்தது, எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும் என பயந்து மீண்டும் எடப்பாடியிடமே எதிர்பாளர்கள் 23 பேர் தஞ்சமடைந்தது என ஏகப்பட்ட அரசியல்கள் நடந்து முடிந்துவிட்டன.

இந்த நிலையில்தான், சி.வி.சண்முகத்தை சந்தித்து சமாதானம் பேசினார் எஸ்.பி.வேலுமணி. அப்போது, ''மன்னிப்பு கடிதம் எல்லாம் தர வேண்டாம்; எடப்பாடியை நீங்கள் சந்தித்தால் போதும். எல்லா கோபமும் சரியாகிவிடும். இனி தான் நம்முடைய ஒற்றுமையை தவெக அரசுக்கு காட்ட வேண்டும். நீங்கள் அதிமுக வுக்கு வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்த சண்முகம், ''அதிமுக சார்பில் நின்று வெற்றிப்பெற்ற எனது எம்.எல்.ஏ. பதவியே வேண்டாம். ராஜினாமா செய்து விடுகிறேன். மீண்டும் நான் போட்டியிட்டு எனது செல்வாக்கில் ஜெயித்துக்கொள்கிறேன்'' என்று சொல்லி வேலுமணியை திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில்தான், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்கிற சண்முகத்தின் முடிவை அறிந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் சண்முகத்தின் குடும்பத்தினர் அனைவரும், ''நீ எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும். உனக்காகத்தான் மக்கள் ஓட்டுபோட்டு மக்கள் ஜெயிக்க வைத்திக்கிறார்கள். ஏற்கனவே எம்.பி. பதவியை ராஜினாமா செய்துட்டே! இப்போ எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்திட்டால்... எப்படி அரசியல் பண்ண முடியும்? உனது ராஜினாமாவைத்தான் எடப்பாடி எதிர்பார்க்கிறார். ஏன்னா கட்சியில் இருக்கும் தனது எதிர்பாளர்களை ஒவ்வொன்றாக வெட்டி எறிந்து வருபவர் எடப்பாடி. 100 சதவீதம் தனது விசுவாசிகளாக அதிமுகவில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

அதற்காகவே எம்ஜிஆர் விசுவாசிகள், ஜெயலலிதா விசுவாசிகள் என அனைவரையும் அவ்வப்போது நீக்கி வருகிறார். இன்றைக்கு அவரை எதிர்க்கிற வல்லமை உனக்கு மட்டும் தான் இருக்கிறது. நீயும் ராஜினாமா செய்து விட்டால் அது எடப்பாடிக்கு லாபம். அதிமுக ஒன்றும் எடப்பாடியின் சொத்துக் கிடையாது. அப்படியிருக்க, அதிமுக வுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை என்கிற நிலையை நீ உருவாக்குவது நல்லதல்ல. கட்சிக்குள்ளே இருந்து அரசியல் செய்'' என்று ராதாகிருஷ்ணனும், குடும்பத்தினரும் அட்வைஸ் செய்தனர். இதனை ஏற்றுதான், எம்.எல்.ஏ. பதவி யை ராஜினாமா செய்வதில் இருந்து விலகி கடந்த 1 மாத காலமாக அமைதியாக இருந்து வருகிறார் சண்முகம்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சி.வி.சண்முகத்தைத் தொடர்பு கொண்டு வேலுமணி பேசியிருக்கிறார். அந்த பேச்சில், ''நீங்கள் இப்படி அமைதியாக இருப்பது சரியில்லை அண்ணே. பழையபடி ஃபார்முக்குள் வாருங்கள். உங்களின் அரசியல் இல்லாமல் கட்சியும் அமைதியாக இருக்கிறது. நீங்கள் கட்சியில் பழையபடி இருக்க வேண்டும். உங்களை வரச் சொல்லி எடப்பாடியார் கேட்கிறார். அவர் சொல்லித்தான் நான் பேசுகிறேன்'' என்று சொல்ல, ''அப்படியா, அப்படியானால்... எடப்பாடியை என்னிடம் பேசச் சொல்லுங்கள்'' என்று கூறியுள்ளார் சண்முகம்.

அதைக்கேட்டு, ''நீங்கள் சொன்னதை எடப்பாடியாரிடம் சொல்லுகிறேன். நிச்சயம் பேசுவார்'' என்று சொல்லி விட்டு தொடர்ந்து சண்முகத்திடம் பேசிய வேலுமணி, ''சட்டமன்றம் 18-ந்தேதி கூடுகிறது. நிறைய பிரச்சனைகளை அங்கு பேச திட்டமிடப்படுகிறது. சில சமயம், தவெக அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ய வேண்டியதிருக்கும். அப்போது நீங்கள் வெளிநடப்பு செய்தால், எடப்பாடிக்கு ஆதரவாக சண்முகம் நடந்து கொண்டார் என்று ஊடகங்களில் செய்தி பரவும். ஒருவேளை வெளிநடப்பு செய்யாமல் சபையிலேயே நீங்கள் அமர்ந்திருந்தால், அது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தவறு என ஊடகங்கள் விமர்சிக்கும். இதுவும் உங்களின் ஆளுமைக்கு ஆரோக்கியமாக இருக்காது அண்ணே. அதனால், கட்சிக்குள் பழையபடி வாருங்கள். எடப்பாடியாரை சந்தியுங்கள். எல்லாம் சரியாகும்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வேலுமணியின் பேச்சைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதித்து வருகிறார் சி.வி.சண்முகம் !

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+