வட தமிழகம் நோக்கி நகரும் டிட்வா புயல்.. சென்னையில் நாளை 47 விமான சேவைகள் ரத்து!
சென்னை: டிட்வா புயல் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 47 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 உள்நாடு, 11 சர்வதேச விமான சேவைகள் என மொத்தம் 47 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுந்தாற்போல் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக நாளை சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 330 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை அதிகாலை சென்னையில் இருந்து 25 கிமீ தூரம் வரை நெருங்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 47 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 உள்நாடு, 11 சர்வதேச விமான சேவைகள் என மொத்தம் 47 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்றும் 57 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூர், ஹைதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் என பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனவே இதற்கு தகுந்தாற்போல் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications