தமிழக எல்லையை கடந்தது ஃபானி புயல்... ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது
Recommended Video
சென்னை: 'ஃபானி' புயல் தமிழக எல்லையை கடந்து சென்றது. நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான, ஃபானி புயல், முதலில், சென்னை மற்றும் ஆந்திரா இடையே புயல் தாக்கும் என, கணிக்கப்பட்ட நிலையில், கடலியல் சூழலால், புயல் திசை மாறி, ஒடிசாவுக்கு நகர்ந்துள்ளது. இந்த புயல் நேற்று, தமிழகத்தின் வடக்கு கடற்கரையோரமாக, 300 கி.மீ.,யில், நெருங்கி வந்தது. அதனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இன்று, ஆந்திராவில் இருந்து சற்று துாரத்தில், கடல் வழியே சுழன்று, நாளை, ஒடிசாவில் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே, நாளை மாலை 5.30 மணிக்கு ஃபானி புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் ஒடிசாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பத்துலட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே கிழக்குக் கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் 103 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஃபானி புயல், தற்போதைய பலத்துடன், தமிழகத்தில் கரை கடந்திருந்தால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், புயல் திசை மாறியதால், மோசமான பாதிப்பில் இருந்து, தமிழகம் தப்பியுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications