Breaking News Live: கஜா புயலின் கண் கரையைக் கடந்தது.. நாகை, வேதாரண்யத்தில் கன மழை!
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று விடுமுறையாகும். நாகை, கடலூர் மாவட்டங்களில் நாளையும் விடுமுறை தொடரும்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு பாம்பன்-கடலூர் நடுவே நாகை அருகே கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே புயல் திசை மேற்கு நோக்கி நகர்ந்து பிறகு வழக்கமான திசையில் பயணித்தது. எனவே வானிலை ஆய்வாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. மெரினாவில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
இன்னும் அரை மணி நேரத்தில் கண்ணின் முழுப் பகுதியும் கரையைக் கடந்து விடும்
கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும்
பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும்
புயல் காற்றுடன் கன மழையும் பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
கஜா புயல் கரையை கடப்பதை அடுத்து மழை பெய்து வருகிறது
நாகையில் நிறைய மரங்கள் சாய்ந்துள்ளது
#WATCH: Strong winds and rainfall hit Nagapattinam in Tamil Nadu. According to MET, #GajaCyclone is expected to make a landfall tonight. pic.twitter.com/heqUK8Ho0A
— ANI (@ANI) November 15, 2018
புயல் கடந்து போகும் வரை வெளியே வருவதைத் தவிர்க்கவும் - உதயக்குமார் கோரிக்கை
As of now 76290 people evacuated to Safety as at 12.10 am ! #Retweet to encourage our dedicated teams on ground in Nagapattinam and other Coastal districts! #GajaCyclone #GajaCycloneUpdate #Nagapattinam #CycloneGaja pic.twitter.com/0CHJTHtp8H
— TN SDMA (@tnsdma) November 15, 2018
கண் பகுதி விரைவில் கரையைத் தொடும் - வானிலை மையம்
கண் பகுதி 60 கிமீ தொலைவில் உள்ளது
புயல் முழுமையாக கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் - வானிலை மையம்
#CycloneGaja is killing it...people pls stay indoors. Massive winds & heavy rains in #Nagappattinam #Vedharanayam #DeltaRegions #GajaCycloneUpdate #GajaCyclone pic.twitter.com/4Sd0l6wVaW
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) November 15, 2018
11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - பாலச்சந்திரன் தகவல்
புயலின் வெளிப் பகுதி கரையைத் தொட்டு விட்டது - வானிலை மையம்
8 மணியளவில் புயலின் உட்பகுதி கரையைத் தொடும்- வானிலை மையம் தகவல்
புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கன மழை பெய்து வருகிறது
காரைக்காலுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டத்திலும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மன்னார்குடியிலிரும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பலத்த மழை பெய்து வரும் பல்வேறு ஊர்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
நாகையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தல்