Breaking News Live: கஜா புயலின் கண் கரையைக் கடந்தது.. நாகை, வேதாரண்யத்தில் கன மழை! Chennai
oi-Veerakumar
Updated: Friday, November 16, 2018, 2:44 [IST]
மக்கள் கஜா புயலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : வானிலை மையம்!- வீடியோ
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று விடுமுறையாகும். நாகை, கடலூர் மாவட்டங்களில் நாளையும் விடுமுறை தொடரும்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு பாம்பன்-கடலூர் நடுவே நாகை அருகே கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே புயல் திசை மேற்கு நோக்கி நகர்ந்து பிறகு வழக்கமான திசையில் பயணித்தது. எனவே வானிலை ஆய்வாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. மெரினாவில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையைக்கடந்தது
கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது
இன்னும் அரை மணி நேரத்தில் கண்ணின் முழுப் பகுதியும் கரையைக் கடந்து விடும்
கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும்
பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும்
புயல் காற்றுடன் கன மழையும் பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
கஜா புயலின் கண் பகுதி கரையைக் கடக்க தொடங்கியது - வானிலை மையம்
கடலூர், நாகை, வேதாரணயத்தில் கனமழை பெய்து வருகிறது
கஜா புயல் கரையை கடப்பதை அடுத்து மழை பெய்து வருகிறது
நாகையில் நிறைய மரங்கள் சாய்ந்துள்ளது
புயல் கரையைக் கடந்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்- அமைச்சர் உதயக்குமார்
புயல் கடந்து போகும் வரை வெளியே வருவதைத் தவிர்க்கவும் - உதயக்குமார் கோரிக்கை
கஜா புயலின் அதி வேக காற்றுப் பகுதி கரையைக் கடந்து வருகிறது - வானிலை மையம்
கண் பகுதி விரைவில் கரையைத் தொடும் - வானிலை மையம்
கண் பகுதி 60 கிமீ தொலைவில் உள்ளது
புயல் முழுமையாக கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் - வானிலை மையம்
கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியது - வானிலை மையம்
நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியது
கஜா புயலின் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியது
முழு புயல் கரையை கடக்க 3 மணி நேரம் ஆகும்
நாகைக்கு 60 கிமீ தொலைவில் கஜா புயல்
வேதாரண்யத்தில் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டுகிறது
புதுச்சேரியில் சூறைக் காற்றுடன் மிக பலத்த மழை பெய்கிறது
வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
5 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
காரைக்கால், கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது
நாகையில் சூறைக் காற்றுடன் மழை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் பேட்டி
கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடக்கும்
கஜா புயல் நாகைக்கு தென் கிழக்கே 80 கி.மீ தூரத்தில் உள்ளது
அடுத்த ஒரு மணி நேரத்தில் கஜா புயல் கரையைக் கடக்கும்
வேதாரண்யம் - நாகை இடையே புயல் கரையைக் கடக்கும்- வானிலை மையம்
ராமேஸ்வரம், கடலூர், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம் பகுதிகளில் கனமழை பெய்கிறது
இராமேஸ்வரம் தீவு பகுதி முழுதும் வரலாறு காணாத அளவிற்கு கன மழை
சென்னையில் பலத்த காற்று வீசுகிறது
நகரின் பல பகுதிகளில் மழையும் பெய்கிறது
கூடுவாஞ்சேரியில் பலத்த காற்றுடன் மழையும் பெய்கிறது
காட்டாங்கொளத்தூரிலும் கன மழை பெய்து வருகிறது
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
கஜா புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்
கஜா புயல் இரவு 12 மணிக்கு பிறகே கரையை கடக்கும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தற்போது கஜா புயல் 11 கிமீ வேகத்தில் நகர்கிறது
கஜா புயல்: மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு
கடலூர், ராமேஸ்வரம், நாகை மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றம்
26,399 மக்கள் முகாம்களில் தங்க வைப்பு
3,871 குழந்தைகள் முகாம்களில் தங்க வைப்பு
164 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது
நாகைக்கு கிழக்கே 110 கிலோமீ்ட்டர் தொலைவில் கஜா புயல்
திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டையில் மின் வினியோகம் நிறுத்தம்
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நடவடிக்கை
வேகமாக நகர்ந்து வருகிறது கஜா புயல்
நாகைக்குக் கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது
புயலை நெருங்குவதால் பாம்பனில் மின்சாரம் துண்டிப்பு
பாம்பன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது
புயல் முன்னெச்சரிக்கை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அமைச்சர் உதயகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்
கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 40 முகாம்கள் செயல்பாடு
3246 குடும்பங்களை சேர்ந்த 12,398 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்
லால்குடி, ஸ்ரீரங்கம், சமயபுரம், நன்னிலம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது
வேதாரண்யத்தின் சுற்று வட்டாரத்தில், மின் வினியோகம் நிறுத்தம்
நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜா புயல் - புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகைக்கு கிழக்கு 138 கி.மீ தொலைவில் கஜா புயல் - வானிலை மையம்
11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - பாலச்சந்திரன் தகவல்
புயலின் வெளிப் பகுதி கரையைத் தொட்டு விட்டது - வானிலை மையம்
8 மணியளவில் புயலின் உட்பகுதி கரையைத் தொடும்- வானிலை மையம் தகவல்
புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கன மழை பெய்து வருகிறது
புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
காரைக்காலுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டத்திலும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மன்னார்குடியிலிரும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பலத்த மழை பெய்து வரும் பல்வேறு ஊர்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
நாகையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தல்
கஜா புயல் எதிரொலி.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
READ MORE
சென்னையிலிருந்து 380 கி.மீ தொலைவில் புயல் உள்ளது
நாகையிலிருந்து 420 கி.மீ தொலைவில் கஜா சுழன்று கொண்டுள்ளது
சென்னையில் ஒரு சில இடங்களில் காலை முதல் மழை
புயலால் அண்ணா பல்கலை.யில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
புயலால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழக வருவாய் துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் மேற்பார்வையில், மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் செல்லும் மற்றும் அங்கேயிருந்து புறப்படும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன
சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை
கோயம்பேடு, பெரம்பூர், திருவான்மியூர், உள்ளிட்ட பகுதிகளில் மழை
பெரம்பூர், போரூர், கொளத்தூரில் மழை
கஜா புயல் : தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்
விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும்
விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, இராமேஸ்வரத்தில் கனமழை பெய்யும்
சென்னையில் மிதமானமழைக்கு வாய்ப்புள்ளது
இன்று மாலை கஜா புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது
கஜா புயல்: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு
தேர்வுகள் நடைபெறும் தேதி பின்பு அறிவிக்கப்படும்
இன்று நடக்கவிருந்த அழகப்பா பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைப்பு
கஜா புயல் : 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம்,
புதுக்கோட்டை, தஞ்சாவூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயல்: சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு
மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு
விமானம் புறப்படுவதில் தாமதம்
கஜா புயல் - முக்கிய ரயில்கள் ரத்து
தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து
திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து
வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை ரயில் ரத்து
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் ரத்து
காரைக்கால் - சென்னை, சென்னை - மன்னார்குடி, வேளாங்கண்ணி - சென்னை ரயில்கள் ரத்து
சென்னையில் காலை 11 மணிக்கு மேல் காற்று வீசும் - வானிலை மையம்
சென்னையில் காற்று வீசும் போது மிதமான மழை பெய்யலாம்
கஜா புயல் வேகம் திடீரென்று அதிகரித்தது
கஜா புயல் தற்போது 14 கிமீ வேகத்தில் நகர்கிறது
காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது
கஜா புயல் இன்று மாலை இல்லை இரவு கரையை கடக்கலாம்
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், ஈக்காடுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை
கஜா புயலின் வேகம் மீண்டும் அதிகரித்தது
23 கிமீ வேகத்தில் நகர்கிறது கஜா புயல்
14 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் வேகமெடுத்தது
புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம், ஈசிஆர், தாம்பரம், சிறுச்சேரியில் நல்ல மழை பெய்யும்- வெதர்மேன்
ஏரியுள்ள பகுதிகளில் மட்டும் மழை பெய்வதால் மகிழ்ச்சியாக இருங்கள்
சூரிய ஒளி மீண்டும் எட்டி பார்க்கும்
புயல் நாகை பகுதிக்கு சென்றுவிட்டது என்பதை மறக்காதீர்
சென்னையிலிருந்து மிக தூரத்தில் உள்ளது கஜா புயல்
சென்னையில் நாள் முழுவதும் மழை பெய்யும் என கனவு காணாதீர்
உள்மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது மழை பெய்யும்
சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர் சந்திப்பு
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 80-90 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்
கடலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்கிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
கஜா புயலின் நகரும் வேகம் திடீரென அதிகரிப்பு
மணிக்கு 25 கி.மீ வேகத்தில் தமிழகம் நோக்கி வருகிறது கஜா
18 கி.மீ வேகத்தில் நகர்ந்த கஜாவின் வேகம் திடீர் அதிகரிப்பு
கஜா புயல்: சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம்
சின்ன குப்பம், பெரிய குப்பம் கடல் பகுதியில் சீற்றம்
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம்
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்கும்
11.30 மணிக்கு கஜா கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்
கஜா புயல் திசை மாறியது
திடீரென மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் பரபரப்பு
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்புங்கள்
தமிழக அரசு அறிவிப்பால், முன்கூட்டியே மூடப்படும் அலுவலகங்கள்?
புயல் பாதிப்புள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் ஆணையர் சுற்றறிக்கை
நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கடலூரில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
கஜா: 7 மாவட்டங்களில் தனியார், அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம்
இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இயக்க வேண்டாம்
வருவாய்த்துறை அறிவுறுத்தல்
கஜா புயல் 21 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது
நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல்
நாகப்பட்டினத்திலிருந்து 187 கி.மீ தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது
கடலூரில் நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்காலுக்கு தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது கஜா புயல்
காரைக்காலிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கஜா புயல் நகர்ந்து வருகிறது
கஜா புயல் எதிரொலி.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
காரைக்காலுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டத்திலும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
மன்னார்குடியிலிரும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பலத்த மழை பெய்து வரும் பல்வேறு ஊர்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
நாகையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தல்
நாகைக்கு கிழக்கு 138 கி.மீ தொலைவில் கஜா புயல் - வானிலை மையம்
11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - பாலச்சந்திரன் தகவல்
புயலின் வெளிப் பகுதி கரையைத் தொட்டு விட்டது - வானிலை மையம்
8 மணியளவில் புயலின் உட்பகுதி கரையைத் தொடும்- வானிலை மையம் தகவல்
புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கன மழை பெய்து வருகிறது
கஜா புயல் - புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
READ MORE
English summary
Cyclone Gaja will make Landfall on Today. Schools and collages loated in 6 districts gets holiday.