அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிவிட்டு! ஒரு நாள் ஆய்வு செய்தால் போதுமா? முதல்வருக்கு டி.ஜே. கேள்வி
சென்னை: அம்மா உணவகத்தை ஒரு நாளைக்கு முதல்வர் ஸ்டாலின் போய் ஆய்வு செய்துவிட்டால் போதுமா? அதுல எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.
எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கிடும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதல்வரின் ஆய்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்த திறனற்ற ஆட்சியில் அம்மா உணவகம் பெரும்பாலான இடங்களில் பெயர் பலகையளவில் தான் இயங்கி வருகிறது.
அம்மா உணவகத்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது என்று கூறியது இதே ஸ்டாலின் அரசு தான்! எவ்வளவு நிதி செலவானாலும் எளிய மக்கள் பசியாறட்டும் என்று உத்தரவு போட்டவர் அம்மா!
ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கினர்.
பின்னர் வேலை ஆட்கள் குறைப்பு,உணவு வகைகளை குறைத்தல்,பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் நிதி ஒதுக்காமல் என பல வழிகளில் அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி தள்ளியது திமுக அரசு!
இந்த திமுக ஆட்சியில், பேருந்திற்கு பணமிருந்தால் போதும் அம்மா உணவகத்தில் உணவிருக்கும் என தன் அம்மாவிடம் சொல்லி விட்டு சொந்த ஊரில் இருந்து வேலைக்கும் படிப்புக்கும் வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றமே இன்று மிச்சமாகியுள்ளது!
நன்றாக சாப்பிட வேண்டிய வயதில் பொருளாதார சூழ்நிலையை கருதி டிபன் சாப்பிடாமல் டீ அருந்தும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் அம்மா உணவகங்களை இந்த அரக்க குணம் கொண்ட அரசு செயல்படுத்தாமல் இருந்ததே காரணம்!
தங்கள் குடும்ப கம்பெனியின் தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிப்படையும் என்பதற்காக எளிய மக்களின் தாகம் தீர்க்கும் அம்மா குடிநீரை நிறுத்தியது நியாயமா? ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் அம்மா மடிக்கணினி நிறுத்தப்பட்டது ஏன்?
அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா மினிகிளினிக் என பல மக்கள் நல திட்டங்களை முடக்கி விட்டு பொய் வேடம் போடும் முதலமைச்சரின் இந்த நடிப்பிற்கு இந்தாண்டின் இறுதியில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நிச்சயம் கிடைக்கும்! இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications