ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் ஜூலை 20-ல் பிரம்மாண்ட பேரணி: இயக்குநர் பா.ரஞ்சித்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் வரும் 20-ந் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என திரைப்பட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவும் தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி ஜூலை 20 பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தப்பி ஓட முயன்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித், ஜூலை 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஞ்சித் வெளியிட்ட அறிக்கை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ந் தேதி சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.
தலித்துகள் சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம்.

100 ஆண்டுகளுக்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகி இருப்பது சுலபமாகக் கடந்து போகக் கூடிய நிகழ்வு அல்ல. ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, ஒரு குடும்பத்துக்கோ, ஒரு இயக்கத்துக்கு நேர்ந்த இழப்பாகக் கருதாமல் ஒவ்வொருவருக்கும் சமூகத்துக்கும் நேர்ந்த இழப்பு என பறைசாற்றுவோம்.
ஜாதி, மதம், இயக்கங்களுக்கு அப்பால் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரியும் வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தலித் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜூலை 20 பேரணியில் திரள்வோம். சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாக சென்று நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்போம். இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications