‛‛400 சவரன் நகை வேணும்’’.. மருமகளை துன்புறுத்திய சோழிங்கநல்லூர் அதிமுக மாஜி எம்எல்ஏ? பரபர புகார்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் மற்றும் அவரது மகன் சதீஷ் குமார் ஆகியோர் மீது மருமகள் வரதட்சணை புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபி கந்தன். இவர் கடந்த 2011ம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கேபி கந்தன் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் சோழிங்நல்லூர் தொகுதியில் கேபி கந்தன் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை கேபி கந்தன் வெற்றி பெறவில்லை. திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷிடம் அவர் தோற்றார்.
இந்நிலையில் தான் கேபி கந்தன் மீது அவரது மருமகள் பரபரப்பான வரதட்சணை புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கேபி கந்தனின் மகன் பெயர் சதீஷ் குமார். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் ஸ்ருதி பிரியதர்ஷினி. இவர் டாக்டராக உள்ளார். திருமணம் ஆன புதிதில் சதீஷ் குமார் - ஸ்ருதி பிரியதர்ஷினி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு பிரச்சனை வர தொடங்கி உள்ளது.
ஸ்ருதி பிரியதர்ஷினிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஸ்ருதி பிரியதர்ஷினி தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:
திருமணத்தின்போது 1000 சவரன் நகை கேட்டனர். 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்பிலான 2 கார்கள், 20 கிலோ வெள்ளி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் 400 சவரன் நகை கேட்டு மாமனார் கேபி கந்தன், கணவர் சதீஷ் குமார் கொடுமைப்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஸ்ருதி பிரியதர்ஷினியின் தந்தை கூறுகையில், ‛‛கேபி கந்தன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் என மகளை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கேட்கின்றனர். பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் மகளை குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர். சமாதானம் பேச சென்ற என்னிடம் 500 பவுன் நகை, ரூ.1 கோடி கேட்கின்றனர். மகள் மருத்துவம் படித்தபோது எடுத்த போட்டோக்களில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகின்றனர்'' என்றார். இந்த புகாரை தொடர்ந்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications