திசை திருப்புவார்கள்.. திருப்பித் திட்டுவதை விட.. கொரோனாவை வேரறுப்பதே முக்கியம்.. தலைவர்களே கவனம்!
சென்னை: ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகளே வெகுவாக பாராட்டும் அளவுக்கு தமிழகத்தில் ஒவ்வொரு செயலும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு அபூர்வமான சூழல் தமிழகத்தில் இதுவரை வந்ததில்லை என்று கூட சொல்லலாம்.
கொரோனா ஒழிப்புப் போரில் முதல்வர் முதல்வர் கடைக்கோடி எம்பி எம்எல்ஏக்கல் வரை அத்தனை பேரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர். அதிகாரிகளும், ஆட்சியாளர்களுமாக சேர்ந்து மக்களுக்காக ஓடிக் கொண்டுள்ளனர். யாருக்கும் நிற்க கூட நேரமில்லை.
ஒருபக்கம் நோயாளிகள் கொத்துக் கொத்தாக குவிந்து வந்தாலும்.. முடிந்தவரை ஏதாவது நல்லது செய்து விட வேண்டும் என்ற வேட்கையுடன் அரசு நிர்வாகம் போராடிக் கொண்டுள்ளது. இப்படி ஒவ்வொரு வகையிலும் அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திசை திருப்பும் செயல்
ஆனால் இப்படியே போனால் பிறகு "அவர்களுக்கு" என்ன மரியாதை.. அவர்களின் "நிபுணத்துவத்திற்கு" என்ன மரியாதை.. அதனால் திசை திருப்பல்களை கையில் எடுத்துள்ளன். திரித்து விடப் பார்க்கின்றனர்.. என்னைப் பாருங்கள்.. அந்தப் பக்கம் பார்க்காதீர்கள்.. அவர்கள் செய்வதைப் பார்க்காதீர்கள்.. அவர்களைப் பாராட்டாதீர்கள்.. அவர்களின் நல்ல செயல்களைக் கண்டு நெகிழாதீர்கள் என்பதே இதன் அர்த்தம்.

அவர்களின் நோக்கம்
"அவர்களது" நோக்கம்.. நல்லது நடக்கிறது என்று மக்கள் மெய் சிலிர்த்துப் போய் விடக் கூடாது.. மாறாக, நாம் செய்யும் திருகு வேலைகளில் அவர்கள் கோபப்பட்டு ஏதாவது வார்த்தையை உதிர்த்தால்.. அதை வைத்து திசை திருப்ப வேண்டும் என்பதே.. இதுவே "அவர்களின்" ஒற்றை அஜன்டா.. இந்த விஷயத்தில் அவர்கள் கில்லாடிகள். அகில இந்தியா முழுவதும் நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான பார்முலாவும் கூட. இதைத்தான் தற்போது கையில் எடுத்துள்ளனர்.

அஜென்டா இதுதான்
அதைத்தான் தற்போது சில நாட்களாக தமிழகம் கண்டு வருகிறது. ஊடகங்கள் சிலவும் கூட அதற்கு உடந்தை என்று கூட சொல்லலாம். காரணம், எதைக் கேட்க வேண்டுமோ அதை விட்டு விட்டு குறிப்பிட்ட "இதை" அவர்கள் துருவித் துருவி கேட்கிறார்கள் என்றால் அஜென்டாக்களின் மாயாஜாலத்தை நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

சர்ச்சைகள் வேண்டும்
மக்களைத் திசை திருப்ப வேண்டும். மக்கள் குழம்ப வேண்டும்.. புதிய சர்ச்சைகள் பின்னால் திரள வேண்டும்.. எது லைம்லைட்டில் இருக்க வேண்டுமோ அதைத் தூக்கிப் போட்டு விட்டு உருப்படாத, உப்புச் சப்பில்லாத, ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவை மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஒரே குறி.. நோ வெறி!
கொரோனா போரில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு அட்வைஸ்தான்.. உங்கள் தலைவரைப் போல ஒரே இலக்குடன் முன்னேறிச் செல்லுங்கள்.. அவர் வாங்காத திட்டா.. பார்க்காத அவமானமா.. திருப்பித் திட்டிக் கொண்டா இருந்தார்.. "கேட்ட வீட்டையே" கொடுத்தாரே!.. ஒரு வீரன் போர்க்களத்தில் வெற்றியை மட்டுமே "குறி" வைத்து வீறு கொண்டெழுந்து விரைவான்.. வேறு எந்த "வெறி"யும் அவனது பார்வையில் படாது.. அதுதான் இப்போது நமது தலைவர்களுக்கும் அவசியம்.. அவசரமும் கூட.. காரணம் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications