அகவிலைப்படி + போனஸ் + 3 மாத அரியர்ஸ்.. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு.. மத்திய அரசின் ஜாக்பாட்
சென்னை: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் தீபாவளிக்கு முன்னதாக 3% அகவிலைப்படியை (DA) உயர்த்தும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி உயர்வு என்பது 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். அக்டோபர் மாத ஊதியம் மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் அதிகரிக்கப்பட்ட டி.ஏ வழங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.

பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படியை (DA) ஆண்டுக்கு இருமுறை மத்திய அரசு உயர்த்துவது வழக்கம். இருப்பினும், இது தொடர்பான அறிவிப்புகள் பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். ஜனவரி டிஏ உயர்வு பொதுவாக மார்ச் மாதத்தில் வரும். இது பொதுவாக ஹோலியை ஒட்டி அறிவிக்கப்படும், அதே சமயம் ஜூலை உயர்வு தீபாவளியை ஒட்டி அறிவிக்கப்படும், இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும்.
இந்த ஆண்டு, ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு கணிசமாக தாமதமாகி உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் ஹரியானா தேர்தலுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்காததால், அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய பகுதியாகும், இது பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கம் கொண்டது. சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
எவ்வளவு அதிகரிக்கும்?: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது DA 50% ஆக உள்ளது. இதை அரசு 3% உயர்த்தினால், ஜூலை 1, 2024 முதல் அகவிலைப்படி 53% ஆகலாம். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
தமிழ்நாடு: ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனஸ் இந்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வங்கியில்.. போனஸ் தொகை செலுத்தப்படும்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பமான ரூ.21,000 என்பதைத் தளர்த்தி அனைத்து C மற்றும் 'பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும். கபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்., என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications