இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு நிறைவேற்றினீர்களா.. ஸ்டாலின் கேள்வி
சென்னை: தமிழக சட்டசபையில் பொது மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதம் வரும் 19ஆம்தேதி வரை நடைபெறுகிறது.
திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆன நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 14-ஆம் தேதி வேளாண்துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து இன்று விவாதம் தொடங்கியது.
இந்த விவாதம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெறும். இன்று விவாதம் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அவர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிமுக நிதி ஒதுக்கவில்லை. அதிமுக அரசு செயல்திறன் இல்லாமல் இருந்ததால் தான் கடன் அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இலவச செல்போன், ஆவின்பால் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றினீர்களா என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்னைக்கும் பின் வாங்க மாட்டோம். பயிர் கடனில் பல குளறுபடிகள் உள்ளன. அதை சரி செய்த பின்னர்தான் தள்ளுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications