தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி நகைகள்.. அரசு எடுத்த பெரிய முடிவு
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க சொத்துக்கள் மற்றும் நகைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அவரது நகைகள் அரசு கருவூலத்தில் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனையுடன், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாஇ சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் , ஜெயலலிதா, சசிகா உள்பட 4 பேரையும் விடுவித்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா காலமானார். அதேநேரம் அடுத்த 2 மாதத்தில் அதாவது 2017 பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறிய உச்ச நீதிமன்றம், அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தது. ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அவருக்கான அபராத தொகை செலுத்தப்படவில்லை. இந்தநிலையில் அபராத தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளில் இப்போது நீதிமனறம் இறங்கியிருக்கிறது. அதன்படி, ஜெயலலிதாவின் சொத்துகளை விற்று அபராதத்தை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஜெயலலிதா வீட்டில் இருந்து 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் - வைர நகைகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருந்தார்கள். இந்த நகைகள் எல்லாம் விசாரணையின் போது கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அந்த நகைகளை ஏலம்விட்டு, அந்த தொகையில் அபராதத்தை செலுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்து.
அதன்படி, ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் மார்ச் 6, 7-ம் தேதிகளில் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு, மாநில அரசின் உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி பணம் திரட்டப்பட உள்ளது.
இதனிடையே இந்த நகைகள் மட்டுமே ரூ.40 கோடி ஏலம் போகும் என்றும், மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அவரது அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இது ஒருபுறம் எனில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வழக்குக்கான கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டி உள்ளது. எனவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன்மூலமாகவே அபராதம் மற்றும் வழக்கு கட்டணத்தை கட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications