சர்வர் கோளாறால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பஞ்சாயத்து! வாரத்திற்கு 2 நாட்களாவது இந்த பிரச்சனை!
சென்னை: தமிழகமெங்கும் அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்களை பதிய முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை அன்று சொல்லவே தேவையில்லை, காலை 10 மணிக்கு போடப்பட்ட முதல் டோக்கனே பிற்பகலில் தான் பதிய வேண்டிய அவலம் உள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் எவ்வளவோ நவீன வசதிகளை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் மூர்த்தி கூறினாலும், இந்த சர்வர் பிரச்சனைக்கு மட்டும் இதுவரை எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை.

சர்வர் பிரச்சனை காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் வாக்குவாதம் முற்றி பல இடங்களில் மோதல் வரை செல்கிறது. தமிழகம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வீடு, விவசாய நிலம், வங்கி அடமானம் பத்திரம், எம்.ஓ.டி. ரத்து, பாகப்பிரிவினை பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கம் ஏற்றுதல், தான செட்டிலெண்ட், என இன்னும் பல தேவைகளுக்காக குவிந்து வருகின்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என ஸ்லாட் ஒதுக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பத்திரப்பதிவுத் துறையின் சர்வர் பிரச்சனை என்பது மாதத்திற்கு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, வாரத்திற்கு 2 நாட்களாவது இந்தப் பிரச்சனை வந்துவிடுகிறது. பத்திரப்பதிவுத் துறையின் மூலம் அரசுக்கு வருவாயை ஈட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் அமைச்சர் மூர்த்தி, சர்வர் வேலை செய்யவில்லை என்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, கடலூர், சேலம், நெல்லை, தஞ்சாவூர், ஆகிய ஒன்பது மண்டலங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களும் ஒரே சர்வரில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சர்வை பிரபல தனியார் மென்பொருள் நிறுவனம் தான் பராமரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications