சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அச்சுறுத்தும் "டெல்டா+".. கேரளாவில் 3 கிராமங்களுக்கு சீல்.. ம.பியில் முதல் பலி.. வேகமாக பரவுகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் டெல்டா + கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது.

Recommended Video

    எச்சரித்தது போலவே நடக்கிறது.. Maharashtra-வில் திடீரென அதிகரித்த Coronavirus பாதிப்பு

    டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா + வகை கொரோனாவாக மாறியுள்ளது. உலகம் முழுக்க 20 நாடுகளில் இந்த டெல்டா + கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவில் நேற்றைய கணக்குப்படி 41 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

    ஆனால் போதிய ஜீனோம் ஆராய்ச்சிகள் நடைபெறாத காரணத்தால் இந்தியாவில் உண்மையான டெல்டா + கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    மகிழ்ச்சி செய்தி.. எல்லா வகை கொரோனாவையும் விரட்ட ஒரே தடுப்பூசி! எலிகளுக்கு நடந்த பரிசோதனை வெற்றி மகிழ்ச்சி செய்தி.. எல்லா வகை கொரோனாவையும் விரட்ட ஒரே தடுப்பூசி! எலிகளுக்கு நடந்த பரிசோதனை வெற்றி

    எப்படி

    எப்படி

    இந்தியாவில் எங்கெல்லாம் டெல்டா + கொரோனா கேஸ்கள் பதிவாகிறதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. டெல்டா + வைரஸின் "இரட்டிப்பு" நேரம் மிக வேகமாக உள்ளது.

    வேகமாக

    வேகமாக

    அதாவது கேஸ்கள் டபுள் ஆகும் வேகம் துரிதமாக உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இந்த டெல்டா + கேஸ்களில் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. புதன் கிழமை இது 41 ஆக உயர்ந்தது. இதனால் டெல்டா + கேஸ்கள் இந்தியாவில் வரும் நாட்களில் இதைவிட அதிகமாக உயர வாய்ப்புள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா + கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    சென்னையில் டெல்டா + கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நர்ஸ் குணமடைந்துவிட்டார். இவர் மூலம் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் டெல்டா + வகை கொரோனா காரணமாக மூன்று கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் உள்ள கட்பாரா கிராமம், பாலக்காட்டில் உள்ள பரலி, பரியாரி ஆகிய கிராமங்களில் டெல்டா + வைரஸ் காரணமாக மொத்தமாக டீல் வைக்கப்பட்டுள்ளது.

     மரணம்

    மரணம்

    மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா + கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்று மரணம் அடைந்தார் இன்னொருவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா + கொரோனா நினைத்ததை விட வேகமாக பரவுவதால் வரும் நாட்களில் கேஸ்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    English summary
    Delta + Coronavirus strain spreads fast: First death in Madhya Pradesh, 3 Villages sealed in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X