பரவும் பன்றிக்காய்ச்சல், மிரட்டும் டெங்கு.. தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்
Recommended Video

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில், டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியான சம்பவமும், மதுரையில் பன்றிக்காய்ச்சலால் 2 பேர் பலியான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

[டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம் ]
இதையடுத்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தனிதனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications