பிசினஸ் டூ பாலிடிக்ஸ்! திருச்சி லோக்சபா தொகுதி எம்பி துரை வைகோ வளர்ந்தது இப்படித்தான்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி சலசலப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இவர் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
1972ஆம் ஆண்டு வைகோ, ரேணுகாதேவி தம்பதியின் மகனாக பிறந்தவர் துரை வைகோ. சென்னையில் பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஐடிசி நிறுவனத்தில் புகையிலை பொருட்களை ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகிறார். அதற்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில், ஆமாம். உண்மைதான். அவர் தான் சொந்தத் திறமையில் அங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார். எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று கூறினார் வைகோ.
வி ரியாலிட்டி எல்எல்பி என்றொரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் துரை வைகோ. கட்டுமானத்துறை தொடர்பான பிசினஸ் செய்து கொண்டிருக்கின்றார். பரம்பரை சொத்துக்கள் அதிகம் உண்டு. என்னதான் வசதியாக வளர்ந்து வந்தாலும் அவர் ஒரு காலம் வரை அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.
"என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று வைகோ கூறியிருந்தார். இது துரை வைகோவின் அரசியல் நோக்கிய நகர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.
அடுத்த சில நாட்களில் மதிமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகளில் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அரசியல் நகர்வு உட்கட்சியினராலே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. "என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள். மதிமுகவின் தலைமையகமான தாயகத்தின் பக்கம் கூட வரமாட்டார்கள்" என்று முன்பு வைகோ கூறிய வார்த்தைகள் துரை வைகோவுக்கு எதிராக திரும்பின.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் துரை வைகோ மதிமுகவின் இணைய அணியில் செயல்பட தொடங்கினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிரமாக நுழைய தொடங்கினார். இதற்கேற்றார் போல, மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொரோனா பேரிடர் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றது,கொரோனா 2வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்றது என மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணித்துக் கொண்ட துரை வைகோ, மக்களிடம் எளிதாக அறிமுகமானார்.
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு கொண்டு வந்தார் வைகோ. மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் ஆனார். இப்படியாக திருச்சி லோக்சபா தேர்தலுக்கு போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications