வார்த்தை விட்ட அமித் ஷா.. வாய் விட்ட மோடி.. இதோ வந்தாச்சு கெடு.. இன்னும் ஒரே வாரம்! விழிக்குது பாஜக
சென்னை: தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும் அமித் ஷாவும், இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, "புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று சொல்லியிருக்கிறார்.. அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசியிருக்கிறார்.. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருக்கிறார்.
சந்தர்ப்பவாதி: இங்கே தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி பேசும் மோடி, பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார்... இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாஜக தமிழகத்தில் இருக்கவே வாய்ப்பு கிடையாது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால், பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.
கும்பகர்ணன்: வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ-யுடன் இப்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது. அதனால் தான் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளாமல், கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது.
மோடி, அமித்ஷா 2 பேரும் தமிழர்களை பற்றி இழிவாக பேசியிருக்கிறார்கள்.. ஒரு கண்டனத்தையாவது தமிழக பாஜகவினர் சொல்லியிருக்கிறார்களா? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, ஏகப்பட்ட அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. மாவட்டந்தோறும் பயணித்து நிர்வாகிகளை சந்தித்து பேசிவருவதுடன், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.. தினந்தோறும் பாஜகவை குறைகூறி அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.
பரபரப்பு: இப்போது, ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
இதே போல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் கடும் கண்டனத்தை பாஜகவுக்கு தெரிவித்துள்ளார். :தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்தபோது தமிழ்மொழி, தமிழர்கள் பற்றியெல்லாம் உச்சிமேல் மெச்சி பேசிய பிரதமர் மோடி. இப்போது இப்படி ஒரு கேலிக் கூத்தான குற்றச்சாட்டைக் கூறுவது அவரிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் குறித்து பேச ஏதுமில்லை. 'மோடி கீ கியாரண்டி' சாயம் வெளுத்துவிட்டது. எனவே, இப்படி நாலாந்தரப் பேச்சாளர் நிலைக்கு ஒரு பிரதமர் இறங்கிவிட்டார்" என்று விமர்சித்திருக்கிறார் வீரமணி.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications