குலுங்கி குலுங்கி அழுத விஜய பிரபாகரன்.. அரண்டு போன சென்னை அரங்கம்.. "சிங்கம் சிங்கம்தான்" விஜயகாந்த்
சென்னை: மறைந்த விஜயகாந்த் குறித்து அவரது மகன் கண்ணீர்மல்க பேசியது, இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. உருக்கத்துடன் விஜய பிரபாகரன் பேசியது, பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.
நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திரையுலகினல் உட்பட பவேறு பிரபலங்களும் பங்கேற்றனர்..
அதேபோல, இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் 2 பேருமே இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் பேசியதாவது:
கேப்டன் விஜயகாந்த்: "சின்ன வயசில், நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட எங்க அப்பாவை தான் நிறைய முறை பார்த்திருப்பேன்.. அப்பான்னாலே நான் ரொம்ப எமோஷனல்.. கேப்டன் எங்கேயும் போகல. நம்மகூடவே தான் இன்னைக்கு இருக்காரு. அவர் இறந்தது முதல் இந்த நாள் வரை எந்த மீடியாவிலும் பேசவில்லை. இப்பதான் முதல் முறையாக பேசுகிறேன்.
அதேபோல் எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும், நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறி போனது மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதேமாதிரி அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் எங்களுக்கு இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை.
பெருமை: எங்களுக்கு அப்படி தான் பழக்கி இருக்கிறார். நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல, என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்றிருக்கிறார்.. அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம். ரொம்ப பெருமையா இதை சொல்வேன்.
காரணம், ஒவ்வொரு நியூ இயர் அன்னைக்கும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பீங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும்போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகளை தந்தேன்.. அதை 2024ல் கண்டிப்பா நிறைவேற்றுவேன். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் தெரிஞ்ச 2024 ரெசல்யூசனை இந்த வருடத்தில் உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவோம். அது என்ன என்பதை இப்பவே சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும்.
சிங்கம் சிங்கம்தான்: கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா தெரியல.. நான் ஒவ்வொரு மீட்டிங்கில் சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.
விஜயகாந்துக்கு நினைவில்லை என்று பல யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றாங்க.. எல்லாமே பொய்.. அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடிகூட, வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம், தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார்.

டிரைவர் அண்ணா: கடைசி வரைக்கும் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்தார். டிசம்பர் 26 வரைக்கும் "ராசாத்தி உன்னை..." பாட்டு போட்டு ரசிச்சுட்டு இருந்தார். எங்க வீட்டு டிரைவர் அண்ணாகூட சேர்ந்து தாளம் போட்டுட்டு இருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் என்கிட்ட சொல்லபோய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பார்த்தேன்.. அப்போ அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.
நெகிழ்ச்சி: டிசம்பர் 26ம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், " இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்" என்று சொல்லி விடை பெறுகிறேன். அவரது மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் கிடையாது.. கோபமும் கிடையாது" என்றார்.
விஜயபிரபாகரன் கண்ணீர் மல்க இப்படி பேச பேச, கூட்டத்திலிருந்தவர்களும் கண்கலங்கினார்கள்.. இந்த பேச்சுதான், இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications