Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மது பிரியர்களை' இனி ஏமாற்ற முடியாது.. டாஸ்மாக் கடையில் வந்த அதிரடி மாற்றம்.. என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதை கட்டுப்படுத்த , புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் கடைகளில் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக 200 கடைகளில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை விற்பனை செய்ய 238 எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மதுபானங்களை எம்.ஆர்.பி விலைக்கு மேல், அதாவது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்கக் கூடாது என்பதுதான் அரசின் உத்தரவு ஆகும். கூடுதல் விலைக்கு விற்றால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Digital board facility in 200 shops, to know the price list in Tasmac shops

ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை கொடுத்தே வாங்குவதாக மது பிரியர்கள் பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. பாட்டிலுக்கு ரூ 5, அல்லது 10 என கூடுதல் விலை வைத்தே விற்பனை செய்வதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் மது பிரியர்கள் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், டாஸ்மாக் கடைகளிலும் வாக்குவாதம் செய்வதைக் காண முடிகிறது.

சில கடைகளில் டாஸ்மாக் ஊழியர்களே, அடாவடியாக பேசுவது போன்ற காட்சிகளும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வபோது வெளியாகி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என அரசு கண்டிப்பான உத்தரவு போட்டாலும் கூட, இது தொடர்பான புகார்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை எவ்வளவு என்பது குறித்த பட்டியல் அடங்கிய டிஜிட்டல் போர்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

Digital board facility in 200 shops, to know the price list in Tasmac shops

இந்த டிஜிட்டல் போர்டில் எந்தெந்த மதுபானங்கள் என்ன ரேட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் தெளிவாக இடம் பெற்றுள்ளது. அதாவது, அளவு வாரியாக என்ன ரேட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரம் டிஜிட்டல் போர்டில் இடம் பெற்றுள்ளது. இதனால், மதுக்கடைகளுக்கு வரும் மது பிரியர்கள்.. டிஜிட்டல் போர்டில் விலை விவரங்களை தெரிந்து கொண்டு வாங்க முடியும்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலத்திற்கு 5 சதவீதம் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கடைகளில் முதல் கட்டமாக இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சி மதுபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+