ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர்தான் ஆளுநர் உரை.. தினகரன் விமர்சனம்
Recommended Video
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றியது ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போல் இருந்தது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.
தமிழக சட்டசபை இந்த ஆண்டு முதல் முறையாக கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதில் ஆர் கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணை பொதுச் செயலாளருமான தினகரன் கலந்து கொண்டார்.
அவர் கூட்ட இடைவேளையின்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திருவாரூர் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் ஜன. 4-இல் அறிவிக்கப்படுவர்.
ஓபிஎஸ்தான் ஜெயலலிதா சிகிச்சையில் தவறு செய்தார். ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை இருந்தது.
அவரது உரை சம்பிரதாய உரையாக இருந்தது. உரையில் இடம்பெற்ற அறிவிப்புகள் வானத்திற்கும், பூமிக்கும் உள்ள இடைவெளி போன்றது. பல பிரச்சனைகளில் மாநில உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என கடுமையாக சாடினார் தினகரன்.