ஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு
அகில உலகத்திற்கும் தலைவர் பிரதமர் மோடிதான் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: "திமுகவிடம் காசு இல்லையா? நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியதுதானே" என்றுஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சுளீரென்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திருவாரூருக்கு வந்ததும் தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் எண்ணிப்பார்த்தேன். பிரதமர் நரேந்திர மோடி தினகரனின் குடும்பத்தார் பாக்கெட்டில் இருப்பது போல் நாடகமாடினார்கள்.
வந்தது பாமக
பாமக வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் வரவழைத்து விட்டார்கள். திமுக விடம் காசு இல்லையா? நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியது தானே?" என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
காசுக்காக சேரவில்லை
தொடர்ந்து அவர் பேசுகையில், இது காசுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல என்றும் அகில உலகத்திற்கும் தலைவர் பிரதமர் மோடிதான் என்றும் ஒரே போடாக போட்டார்.
காசு கொடுத்து சேர்த்ததா
திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதைப் பார்த்தால் காசு கொடுத்த அமைத்த கூட்டணி என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு பணம் கொடுத்தோம் என்று அவர் மறைமுகமாக சொல்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.