சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம்? திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பதில்
சென்னை: சிறையிலிருந்து வெளியே வந்தால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரையிலும் இறந்த பிறகும் சசிகலாவின் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் முதல்வராக பதவியேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக இருந்தது. எனினும் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டது.

ஒரே அணி
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இந்த நிலையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, ஒரே அணியாக மாற முடிவு செய்தது. இதை தினகரன் விரும்பவில்லை.

எடப்பாடி தரப்பு
அதே வேளையில் எடப்பாடி அணியுடன் இணைய வேண்டுமானால் தினகரன், சசிகலாவை ஓரங்கட்ட வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்றால்தான் அதிமுக எதிர்காலத்துக்கு நல்லது, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை திரும்ப கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் எடப்பாடி தரப்பும் ஓபிஎஸ்ஸின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டது.

சசிகலா
அன்று முதல் சின்னம்மா என கூறிய வாய்கள் சசிகலா என அழைக்க ஆரம்பித்தன. இவர்களில் சசிகலா ஆதரவாளர் என சொல்லப்படும் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுதான் ரொம்ப ஓவராக இருந்தது. இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா சிறையிலிருந்து திட்டமிட்டு வருகிறார் என தகவல்கள் வந்தன.

செய்தியாளர்கள்
அதுமட்டுமல்லாமல் நன்னடத்தை விதிகளின்படி அவர் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சசிகலா சிறையிலிருந்து வந்ததும் நேராக அதிமுகவுக்கு வருவாரா என செய்தியாளர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர்.

அதிமுக
அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications