“இந்தியா மேப்பில் தவறு”.. தமிழக அரசின் DIPR வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை.. கொந்தளித்த அண்ணாமலை
சென்னை: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி நீக்கப்பட்ட இந்தியா வரைபடத்தை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒரு வீடியோவில் பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றதன் நினைவாக கேரள மாநிலம் வைக்கம் நகரில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கி ஆணையிட்டார்.

இதைத்தொடர்ந்து, பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை நாளை திறந்து வைக்க கேரளாவிற்கு இன்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் & நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பது தொடர்பான காணொளி, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய வரைபடம் காட்டப்படுகிறது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்த இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதி இடம்பெறவில்லை. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR (தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை), நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது.

நமது நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் இந்த மாநிலம் வழிநடத்தப்பட்டால், மாநில அரசின் துறைசார்ந்த பணிகளைக் கையாள அவர்களால் அமர்த்தப்பட்ட தகுதியற்ற கைப்பாவைகள் இத்தகைய மெத்தனப் போக்கில் செயல்படுவதில் தான் முடிவடையும்.
இந்தச் செயல் திமுகவின் தேசிய ஒருமைப்பாட்டைப் புறக்கணிக்கும் செயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதுபோன்று மீண்டும் செய்யத் துணியக்கூடாது என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் எக்ஸ் பதிவில், ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது போல இந்திய வரைபடம் சித்தரிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications