இயக்குநர் வெற்றிமாறனுக்கு தந்தை பெரியார் விருது.. எஸ்டிபிஐ விழாவில் திரண்ட திமுக, கூட்டணி கட்சியினர்
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனுக்கு தந்தை பெரியார் விருதையும், காயிதே மில்லத் விருதினை திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கி எஸ்டிபிஐ கட்சி கவுரவித்தது.
ஆண்டுதோறும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்தில் ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஹயாத் மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திராவிடர் கழக பொருளாளர் வீ குமரேசன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். காயிதே மில்லத் விருதினை திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருதினை திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை கல்வியாளரும், மைசூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் லெ.ஜவஹர் நேசனுக்கும் வழங்கப்பட்டது.

புரட்சியாளர் பழனிபாபா விருதினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனுக்கும், கவிக்கோ விருதினை மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கும், நம்மாழ்வார் விருதினை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் முகம்மது அலிக்கும், அன்னை தெரசா விருதினை சென்னை திருவொற்றியூர் சமூக சேவகர் அலி பாஷாவுக்கும், சயீத் சாஹிப் விருதினை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த வேலூர் ஆ.சே.மு. ஷேக் மீரானுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுகளை வழங்கி உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், "கடந்த 2017ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த ஆளுமைகள், துறை சார்ந்த சேவையாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து தலைவர்களின் பெயரில் விருதுகளை வழங்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கெளரவித்து வருகின்றது.

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் விருது, அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரக்கூடிய தகுதி, ஒரே மொழியான தமிழ் மொழிக்கு தான் உண்டு என உரத்து முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது, சமூக நீதிக்கு வழிகாட்டிய, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தந்தை பெரியார் பெயரில் விருது, கல்விக்கு கண் தந்தவர் மட்டுமல்ல, தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக தொலைநோக்கு பார்வையோடு அணைகளை கட்டிய காமராஜர் பெயரில் விருது, இயற்கைக்காக போராடிய இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பெயரால் விருது, தமிழுக்கு மிகச்சிறந்த கவிதைகளை தந்த கவிக்கோவின் பெயரால் விருது, இன்றைக்கு இருக்கக்கூடிய பாசிச பயங்கரவாதம் என்னவென்று தெரியாத அந்த காலக்கட்டத்தில் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பழனி பாபா பெயரில் விருது, மனிதநேயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அன்னை தெரசாவின் பெயரில் விருது என்று, ஒரு கொள்கைவாதிகளை கௌரவிக்கும் விதமாகத்தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் பெயராலும் விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, இவர்களது சேவை சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்தே சிறந்த ஆளுமைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி விருதுகளை வழங்கி கெளரவித்து பாராட்டி வருகின்றது. நாடு இருக்கும் சூழலில் இந்த ஆளுமைகளின் சேவைகள் இந்த நாட்டிற்கு மென்மேலும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாவும், அவர்கள் மென்மேலும் பணி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதை வலியுறுத்தியும் இந்த விருதினை நாங்கள் வழங்குகின்றோம்.
அந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம். விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications