குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம்.. அதிகாரிகளை எதிர்த்து காலி குடங்களுடன் வீதிக்கு வந்த மக்கள்
Recommended Video
சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அலைக்கழிக்கப்பட்டு வரும் பொதுமக்கள், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் சாலையில், 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றுஅப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவர் கூறுகையில், தங்களது பகுதிக்கு குடிநீர் விநியோகம் அடியோடு நின்றுவிட்டது. குடிநீர் வாரிய பொறியாளரை மிரட்டி, சிலர் தங்கள் பகுதிக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 4 லாரி தண்ணீரை எடுத்து சென்றுவிடுவதாக புகார் தெரிவித்தார்,
மேலும் பேசிய சிலர் உரிய தண்ணீரை தங்களுக்கு வழங்க கோரி நியாயம் கேட்டால், தற்போது இணைப்பில் இருக்க கூடிய தண்ணீரையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் எனகூறினர். போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதே போல அவினாசி அருகே உப்பிலிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி கூறிய மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்கள், தண்ணீருக்காக சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை எடுத்து கொண்டு தெருதெருவாக அலைவதாக வேதனை தெரிவித்தனர். இதனால் சில நாட்களில் வேலைக்கு செல்வது கூட பாதிக்கப்பட்டு வருமானத்தை இழக்க நேர்வதாக கூறியுள்ளனர்.
இது பற்றி எத்தனையோ முறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து நேரில் பாாவையிடவுமில்லை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க முன்வரவுமில்லை. எனவே வேறு வழியின்றி தற்போது போராட்டத்தில் குதித்துள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடந்த 7 ஆண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை என்று, மல்லாசமுத்திரம் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேசி சமாதானம் செய்தனர். சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications