பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து ஹரி நாடார் நீக்கம்! ராக்கெட் ராஜா அதிரடி அறிவிப்பு!
சென்னை: பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஹரி நாடாரின் கருத்திற்கோ, செயலுக்கோ பனங்காட்டுப் படை பொறுப்பேற்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்ததோடு தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் ஹரி நாடார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.
இதனிடையே பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

கட்சியிலிருந்து நீக்கம்
''திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் படி ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.''

அதிரடி அறிவிப்பு
''அதனால் ஹரி நாடாரின் கருத்திற்கோ, செயலுக்கோ இனி பனங்காட்டுப் படை கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டுப் படை உறவுகள் இவரோடு இனி கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவிடம் இருந்து அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர் சர்ச்சை
ஹரி நாடாரை பொறுத்தவரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியை மிரட்டி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

பல முகங்கள்
அதிமுக ஆட்சியிலேயே ஹரி நாடார் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தாலும், அப்போது அது கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது தூசு தட்டி எடுக்கப்பட்டு விசாரணை வேகமெடுத்திருக்கிறது. பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, நாடார் சங்க செயற்பாட்டாளர் என ஹரி நாடாருக்கு பல முகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications