மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் கருத்து வேறுப்பாடு, தற்போது மீண்டும் அசுர வெடித்துள்ளது. மேட்டூர் அணை போதிய நீர் இன்றி முடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு அடுத்த மிகப்பெரிய சவாலாக மேகதாது அணை விவகாரம் உருவெடுத்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணையைக் கட்ட அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

DK Shivakumar

காயை நகர்த்தும் டி.கே. சிவகுமார்

மத்திய அமைச்சருடனான இந்தச் சந்திப்பின் போது கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வழங்கிய மனுவில், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்பு தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும் (Review Petition) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமானது (CWMA) மத்திய நீர் ஆணையத் திட்டம் (CEA) தொடர்பாக மேகதாது அணைத் திட்டத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்யத் தெரிவித்துள்ளது. எனவே, சட்ட ரீதியான தடைகள் எதுவும் இல்லை எனக் கூறி, மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான இறுதி அனுமதியை (Detailed Project Report Approval) மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் டெல்லியில் வலுவாகக் கோரியுள்ளார்.

'தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்'

கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவகுமார் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறார். "தமிழ்நாடு அரசு தங்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட முயற்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும், அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது" என்று அவர் முந்தைய பேட்டிகளிலும் ஓப்பனாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது டெல்லியில் நேரடியாகவே மத்திய அமைச்சரைச் சந்தித்துத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற அவர் களமிறங்கியுள்ளதால், அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலோடு மேகதாதுவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கர்நாடகா முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது தெளிவாகியுள்ளது.

தவெக அரசுக்கு நெருக்கடி

தமிழ்நட்டு விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு மேட்டூர் அணை மற்றும் காவிரி நீரையே முழுமையாக நம்பியுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 19 டிஎம்சி காவிரித் தண்ணீரைத் தராமல் கர்நாடகா ஏமாற்றி வரும் சூழலில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் எஞ்சிய நீரும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.

சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோதியைச் சந்தித்த போது மேகதாதுவிற்கு அனுமதி தரக் கூடாது என முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் நேரில் சென்று அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+