மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது?
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் கருத்து வேறுப்பாடு, தற்போது மீண்டும் அசுர வெடித்துள்ளது. மேட்டூர் அணை போதிய நீர் இன்றி முடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு அடுத்த மிகப்பெரிய சவாலாக மேகதாது அணை விவகாரம் உருவெடுத்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணையைக் கட்ட அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

காயை நகர்த்தும் டி.கே. சிவகுமார்
மத்திய அமைச்சருடனான இந்தச் சந்திப்பின் போது கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வழங்கிய மனுவில், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்பு தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும் (Review Petition) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமானது (CWMA) மத்திய நீர் ஆணையத் திட்டம் (CEA) தொடர்பாக மேகதாது அணைத் திட்டத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்யத் தெரிவித்துள்ளது. எனவே, சட்ட ரீதியான தடைகள் எதுவும் இல்லை எனக் கூறி, மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான இறுதி அனுமதியை (Detailed Project Report Approval) மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் டெல்லியில் வலுவாகக் கோரியுள்ளார்.
'தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்'
கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவகுமார் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறார். "தமிழ்நாடு அரசு தங்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட முயற்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும், அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது" என்று அவர் முந்தைய பேட்டிகளிலும் ஓப்பனாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது டெல்லியில் நேரடியாகவே மத்திய அமைச்சரைச் சந்தித்துத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற அவர் களமிறங்கியுள்ளதால், அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலோடு மேகதாதுவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கர்நாடகா முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது தெளிவாகியுள்ளது.
தவெக அரசுக்கு நெருக்கடி
தமிழ்நட்டு விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு மேட்டூர் அணை மற்றும் காவிரி நீரையே முழுமையாக நம்பியுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 19 டிஎம்சி காவிரித் தண்ணீரைத் தராமல் கர்நாடகா ஏமாற்றி வரும் சூழலில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் எஞ்சிய நீரும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோதியைச் சந்தித்த போது மேகதாதுவிற்கு அனுமதி தரக் கூடாது என முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் நேரில் சென்று அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications