மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்.. என்ன ஆச்சு? - அறிக்கை விட்ட தேமுதிக!
சென்னை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி, தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது அபிமானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜயகாந்த், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் திடீர் மருத்துவமனை அனுமதியால் அதிர்ச்சியடைந்த தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியைக் கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த், அவ்வப்போது மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications