தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை.. 2-3 நாட்களில் டிஸ்சார்ஜ்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கு, இவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த் சில நாட்கள் மட்டும் பிரச்சாரம் செய்தார்.

சுற்றுப்பயணம்
உடல்நிலை சரியாக ஒத்துழைக்காத காரணத்தாலும் கொரோனா காலம் என்பதாலும் பாதுகாப்பு கருதி விஜயகாந்த் பெரிய சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டது.

மூச்சு
மூச்சு பிரச்சனை என்பதால் அவருக்கு கொரோனா சோதனை காலையில் எடுக்கப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சு திணறல் வேறு காரணங்களுக்காக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கண்காணிப்பு
அவருக்கு கொரோனா இல்லை ஏன்றாலும், இன்னும் இரண்டு - மூன்று நாட்கள் அவரின் உடல்நிலை கண்காணிக்கப்படும். அவருக்கு உடலில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறார். உடல்நிலை சீராக உள்ளது.

மூன்று நாட்கள்
இதனால் மூன்று நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இன்று விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தேமுதிக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலர் விசாரித்தனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications