அதிமுகவுடன் பேசி வருகிறோம்.. இன்னும் 2 நாளில் சொல்கிறோம்.. தேமுதிக சுதீஷ் அறிவிப்பு!
தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க இன்றும் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
Recommended Video

சென்னை: அதிமுகவுடனான லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கும் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரை முடிப்பதற்கு கூட இத்தனை ஆலோசனை கூட்டங்கள் நடந்து இருக்காது. ஆனால் தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இது தேமுதிக கட்சிக்குள் நடத்திய 4வது ஆலோசனை.
இது இல்லாமல் அதிகாரபூர்வமற்ற முறையில் நிறைய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தியது.

ஆலோசனை
சென்னையில் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடந்தது.

யார் எல்லாம்
இந்த ஆலோசனையில் விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், துணை பொதுச்செயலாளர் சுதீஷ், கட்சியை எம்எல்ஏக்கள், அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக உடன் கூட்டணி வைப்பது குறித்து மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

பேட்டி அளித்தார்
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இந்த ஆலோசனைக்குபின் பேட்டி அளித்தார். அதில், அதிமுக உடன் பேசி வருகிறோம். கூட்டணி ஆலோசனைகள் நடந்து வருகிறது. நாங்கள் திமுக உடன் பேசவில்லை.

2 நாள்
இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம். அதிமுகவுடனான கூட்டணி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும். அதன்பின் போட்டியிட போகும் தொகுதிகள் குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று சுதீஷ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications