விஜயகாந்த்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான்- சரியாகிவிட்டது- 2 நாட்களில் வீடு திரும்புவார்: பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான் இருந்தது; தற்போது அது சரி செய்யப்பட்ட நிலையில் அடுத்த 2 நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது என கூறப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

தேமுதிக அறிக்கையால் குழப்பம்
தேமுதிக அறிக்கையில் விஜயகாந்துக்கு கொரோனா சரி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனை அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விஜயகாந்த் நலம்
விஜயகாந்துக்கு மிக மிக லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அவர் தற்போது பூரண உடல்நலத்துடன் நலமுடன் இருக்கிறார்.

அடுத்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்
அடுத்த ஓரிரு நாட்களிலேயே வீடு திரும்புவார். விஜயகாந்த் வீடு திரும்பிய உடனேயே, அடுத்த வாரம் தேமுதிக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். விஜயகாந்த் உடல்நலம் குறித்து போனில் விசாரித்த முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

கொரோனா எப்படி வந்தது?
தேமுதிக தலைமை கழகம் இது தொடர்பான நன்றி அறிவிப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளது. வீட்டில் சென்னை மாநகராட்சி ஊழியர்களை தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. அது தவறான தகவல். விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. எங்களது பக்கத்து வீட்டில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாங்கள் வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் அமர்ந்து பேசுவோம். அதுபோன்ற சூழ்நிலைகளால் கொரோனா தொற்று தாக்கியதா எனவும் தெரியவில்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications