இந்தி தெரியாதவர்களை வெளியேற சொல்வதா...இனிமேல் இதுபோல நடக்கக்கூடாது - விஜயகாந்த் கடும் கண்டனம்
இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தெரியாது என சொன்ன செயலாளர் ராஜேஷ் பாடம் எடுக்க தகுதியற்றவர் என்றும் இனிமேல் இதேபோல நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது இவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன.

கடைசி நாளான 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் அதில் உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா, இந்தியில் பேசியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் பேசும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்தார். ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுஷ் துறை செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேபோல், ராமதாஸ், வைகோ, உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தநிலையில் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், ஆங்கிலம் தெரியாது என சொன்ன செயலாளர் ராஜேஷ் பாடம் எடுக்க தகுதியற்றவர் என்றும் இனிமேல் இதேபோல நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications