இந்தி தெரியாதவர்களை வெளியேற சொல்வதா...இனிமேல் இதுபோல நடக்கக்கூடாது - விஜயகாந்த் கடும் கண்டனம்
இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தெரியாது என சொன்ன செயலாளர் ராஜேஷ் பாடம் எடுக்க தகுதியற்றவர் என்றும் இனிமேல் இதேபோல நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது இவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன.

கடைசி நாளான 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் அதில் உரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா, இந்தியில் பேசியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் பேசும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்தார். ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுஷ் துறை செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேபோல், ராமதாஸ், வைகோ, உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தநிலையில் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், ஆங்கிலம் தெரியாது என சொன்ன செயலாளர் ராஜேஷ் பாடம் எடுக்க தகுதியற்றவர் என்றும் இனிமேல் இதேபோல நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications