புதிய உற்சாகத்தில் தேமுதிக செயற்குழு! விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு! தொண்டர்கள் மகிழ்ச்சி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், வரும் 14ம் தேதி புதிய உற்சாகத்துடன் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் புதிய அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீப ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் உடல்நிலை மேலும் மோசமானது. எனவே பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில், திடீரென சளி தொற்று ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்களும் சிகிச்சையளித்தனர். இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சோஷியல் மீடியாக்களில் பரவின. இதனையடுத்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இத தொடர்பாக மருத்துவமனை சார்பில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” என்று அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.
அதாவது, தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிச. 14 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், புதிய உற்சாகத்துடன் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications