விஜய் பற்ற வைத்த நெருப்பால் திமுக அணியில் தீ பிடித்ததே.. காங்கிரஸ் எம்பியின் கருத்தால் கொந்தளிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பேசிய "ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டதால் திமுகவினர் கடும் கோபமடைந்துள்ளனர். மாணிக்கம் தாகூரின் எக்ஸ் பக்கத்தில் மிக கடுமையாக திமுகவினர் விமர்சித்தும் வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள விசிகதான் ஆட்சியில் பங்கு- அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை முன்வைத்தது. இது திமுக கூட்டணியை சிதறடிக்கும் சதித் திட்டம் என்கிற விமர்சனமும் எழுந்தது. காங்கிரஸும் மேம்போக்காக அதிகாரப் பகிர்வு பற்றி பேச தொடங்கியது.

தற்போது நடிகர் விஜய், விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் பகிரங்கமாகவே, ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தருவோம் என அழைப்பு விடுத்தார். இதனையடுத்து நேற்று முதலே சிறிய கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என பலரும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கருத்தை திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்ற நிலையில் காங்கிரஸும் இப்போது கை கோர்த்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது என விஜய் மாநாடு பற்றி எதுவும் குறிப்பிடாமல் மொட்டையாக வெள்ளோட்டம் விடுவதைப் போல பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான் திமுகவினர் தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பின்னூட்டங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், மற்ற காங்கிரஸ் எம்பிஸ் எல்லாம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் போது நீங்கள் ஏன் வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாய் என்று இப்போது தான் புரிந்தது என திமுக ஆதரவாளர் Raj Vimal பதிவிட்டுள்ளார். திமுகவை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் "ரொம்ப வருஷமா Waste Luggageஅ சுமந்துட்டு இருக்குறோம், கிளம்புங்க ரிலாக்ஸா “எங்களுக்காக”உழைச்சிக்கிறோம் என கோபத்தைக் கொட்டியிருக்கிறார். இதேபோல திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொள்ளட்டும்; பேசாமல் தவெகவில் சேர்ந்துவிடுங்கள் என்றெல்லாம் அதில் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications