திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள்? 4 பேர் குழு அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில், சுப்பராயன் எம்பி, முத்தரசன், பழனிசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வரும் 27 ஆம் தேதி முதல் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக வழங்கியிருந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தோழர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. நான்கு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக் குழு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த
தோழர்கள் மு.வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா. முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., கோ.பழனிசாமி ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications