ஈரோடு கிழக்கில் திமுகதான் போட்டி.. ஸ்டாலினை சந்தித்தார் சந்திரகுமார்! நேற்றே சொன்ன "ஒன்இந்தியாதமிழ்"
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமாரை வேட்பாளராக அறிவிக்க இன்று காலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ஆனால், இதற்கு முன்பே திமுக இவ்விடத்தில் போட்டியிடும் மற்றும் சந்திரகுமாருடன் இணைந்து மேலும் இருவரை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேர்காணல் செய்துவிட்டார் என்ற தகவலை "ஒன்இந்தியாதமிழ்" இணையதளம் செய்தியாக நேற்று வெளியிட்டது.
இந்த செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, காங்கிரஸ் தாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடமாட்டோம் என்று அதிரடி அறிவிப்பு செய்தது. திமுக இன்று காலை சந்திரகுமாரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது. இதன் மூலம், "ஒன்இந்தியா தமிழ்" தங்களின் துல்லியத்தையும், வேகத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நம்பகமான மற்றும் முன்னோடியாக செயல்படும் "ஒன்இந்தியா தமிழ்", அனைத்து வகை செய்திகளையும், குறிப்பாக தமிழக அரசியல் நிகழ்வுகளை அறிய விரும்புவோருக்கு முதன்மையான தகவல் பெட்டகமாக பல நீண்ட காலமாக விளங்கி வருகிறது. திரைமறைவு தகவல்களை வாசகர்கள் முன்பாக விருந்துபடைப்பதில் "ஒன்இந்தியா தமிழ்" என்றும் சமரசம் செய்யாது என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல். வாசகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே செல்லவும் இதுதான் காரணம். உங்கள் ஆதரவுடன், "ஒன்இந்தியாதமிழ்" நேரடியாக களத்திலிருந்து சிறப்பு செய்திகளை உடனுக்குடன் பெற்று வழங்கும் என்ற உறுதியையும் அளிக்கிறோம்












Click it and Unblock the Notifications