இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்.. "5 இடங்கள், 5 பேச்சாளர்கள்".. திமுக வெளியிட்ட பரபர அறிவிப்பு!
சென்னை: இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் 5 இடங்களில் நடக்க இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில் கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்தி எதிர்ப்பு தீர்மானம்
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்கூட்டம்
பின்னர் இந்தி திணிப்பு தீர்மானம் பற்றிய விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில், நவ.4ல் தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

டெல்டாவில் பொதுக்கூட்டம்
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் 5 இடங்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், நவ.4ல் திருச்சி, முசிறி, திருவெறும்பூர் பகுதிகளில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், நவ.5ல் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் திமுக விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சாளர்கள் யார்?
அதேபோல் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ், சாமிநாதன், எஸ்எஸ் சிவசங்கர் மற்றும் ஆ.ராசா உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் என்று திமுக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக டெல்டா மண்டலத்தில் மட்டும் பொதுக்கூட்டங்களுக்கான தேதி மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications