அவர் சொல்லித்தான் வேலுமணி மீது ரெய்டு.. ஓபிஎஸ் பின்னாடி ஸ்டாலின் இருக்காரு- சி.வி.சண்முகம் ஒரே போடு!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றாம்சாட்டியுள்ளார்.
Recommended Video
ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என சி.வி.சண்முகம் குற்றாம்சாட்டியுள்ளார்.
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சென்சார் கருவியும் பொருத்த வேண்டும்.. தமிழக அரசு அதிரடி!
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதன் விவரம் வருமாறு:
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஓராண்டு காலம் கடந்து நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கூட்டு பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகின்றன. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழிவாங்கும் திமுக அரசு
அங்கொன்றும், இங்கொன்றுமாக கஞ்சா விற்கப்படுவதாக செய்திகள் வருவது மாறி இன்று இந்தியாவின் கஞ்சா தலைநகராக சென்னை மாறியிருக்கிறது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கி இருக்கிறது. அதற்கு இந்த ஸ்டாலின் அரசே காரணம். இப்படிப்பட்ட சூழலில் திமுக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர், அதிமுகவின் முன்னணி தலைவர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கைப் போட்டு, அவரது வீடு உள்பட கிட்டத்தட்ட 100 இடங்களில் சோதனை செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையின்போது எஸ்.பி.வேலுமணி ஒரு முக்கிய தூணாக இருந்து இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை அச்சுறுத்த வேண்டும், பணிய வைக்க வேண்டும் என்பதற்காக கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.
ஓபிஎஸ் பின்னால் ஸ்டாலின்
எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி அதிமுகவை முடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. அதிமுகவுக்கு துரோகம் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு உதவி வருகிறது. ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது. ஓபிஎஸ் திட்டம் பலிக்காது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.