Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் தான்.. போட்டோ வெளியிட்ட தமிழக பாஜக.. பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை இதற்கு முன்பு ஜாமீனில் எடுத்தது பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் என திமுக குற்றம்சாட்டிய நிலையில், ஜாமீனில் எடுத்தது திமுக நபர் தான் என தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்டது.

 DMK cadre take karukka vinod in bail: tamilnadu bjp accuses

பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் குறித்த ஆளுநர் மாளிகையின் புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டி இருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், பாஜகவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருப்பதாகக் கூறி திமுக ஐடி விங் புகைப்படங்களை வெளியிட்டது. "ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்த திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார். அம்பலமான பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம்!" என திமுக விமர்சித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், "ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது.

பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப் பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் பாம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக திமுக, பாஜக தரப்பில் மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் குண்டை வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக ஆளா, திமுக ஆளா என்பதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+