கடைக்கோடி தொண்டனை கண்டுகொள்வதே இல்லை.. குவியும் புகார்கள்.. பதில் சொல்லியே டயர்ட் ஆகும் எம்.பி!
சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கட்சியின் கடைக்கோடித் தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என உடன்பிறப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், விடிவு காலம் பிறக்கும் எனக் காத்திருந்த தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சியினரால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க பிரமுகர்கள், லோக்கல் உடன்பிறப்புகளின் குறைகளைத் தீர்த்து வைக்காததால், பலரும் சமூக வலைதளங்களில் புகார் வாசிக்கின்றனர்.

பொய் வழக்கு
சமீபத்தில் கூட, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.கவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக இருக்கும் நிலையிலும் இன்னும் ரத்து செய்யவில்லை என தி.மு.க தொண்டர்கள் சிலர் மனம் வெதும்பியிருந்தனர். இதுதொடர்பாக மேலிட கவனத்திற்கு கொண்டு செல்வதாக ட்விட்டரில் ஆக்டிவ்வாக செயல்படும் தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானப்படுத்தினர்.

சட்ட உதவிகள்
மேலும், தி.மு.கவினர் மீது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகள், புகார்கள் குறித்து என்னிடம் கூறுங்கள். உறுதியாக அவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்படும். பொய் வழக்குகளை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நான் உங்களுக்குத் துணை நிற்பேன் என தருமபுரி எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் உறுதி அளித்திருந்தார்.

தொண்டர்கள் வேதனை
நேற்று கூட தி.மு.க தொண்டர் ஒருவர், "கோவை மருத்துவமனையில் குடலில் இருந்து இந்த நீர் எடுத்து கொடுக்கப்பட்டு 15 நாட்கள் ஆச்சு இன்னும் ரிப்போர்ட் வரலைன்னு சொல்லி அலைய விடுறாங்க. அதுக்குள்ள என் உயிர் போயிரும் போல, கடந்த இரண்டு மாசமா சிகிச்சை பெறுவதற்கு திமு.கவினர் யாரும் உதவவில்லை இதுதான் கடைக்கோடி தொண்டன் நிலைமை" என வேதனையோடு ட்வீட் செய்திருந்தார்.

நிச்சயமாக உதவுவோம்
அந்தப் பதிவை சிலர் தருமபுரி எம்.பியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதற்கு அவர், அந்த ட்வீட்டிலேயே தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளார். அவருக்கு அப்பகுதி தி.மு.க நிர்வாகிகள் மூலம் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதேபோன்று, தி.மு.க தொண்டர்கள் பலரும், தி.மு.க நிர்வாகிகளை ட்விட்டரில் மென்ஷன் செய்து தங்களது குறைகளையும் புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். அவர்களது பின்னணியை சரிபார்த்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய தி.மு.க சார்பில் உரிய வசதிகளைச் செய்ய வேண்டும் என தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி












Click it and Unblock the Notifications