இன்று நடைபெறுவதாக இருந்தது.. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து
சென்னை: இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் சட்டசபை வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள ஸ்டாலின் அறையில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டம் நடைபெற உள்ளது.
ஆளுநர் உரையில் என்னென்ன அறிவிப்புகள்... முழு விவரங்களின் பட்டியல்
இதில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டங்கள் எவ்வாறு நடத்தப்படும், என்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதால், இன்று மாலை நடைபெறவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.