அரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா?
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் செந்தில் பாலாஜி போராட்டம் செய்து வருகிறார்.
சென்னை: செந்தில் பாலாஜி இப்போது நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தினால் அரவக்குறிச்சியே பரபரத்து காணப்படுகிறது. நாளை இறுதி கட்ட பிரச்சாரத்துக்கு திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
4 தொகுதி பிரச்சாரத்தில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
நாளைக்குதான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள். அதனால் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் 12 இடங்களிலும் திமுக நட்சத்திர பேச்சாளர்கள் 28 இடங்களிலும் என மொத்தம் 40 இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து பேசி ஓட்டு கேட்க முடிவானது.

36 மணி நேரம்
இதற்காக முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் பொதுவாக இதுபோன்ற விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்கிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிமணி
ஆனால் தொடர்ந்து அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டும் செந்தில்பாலாஜிக்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் இன்று காலை முதல் இப்போது வரை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனுமதி கேட்டு காத்திருக்கிறார். அவருடன் ஜோதிமணியும் உட்கார்ந்திருக்கிறார்

ஆலோசனை
தேர்தல் அலுவலரோ, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து அவர்கள் அனுமதித்த பிறகே உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என செந்தில் பாலாஜியிடம் கூறியுள்ளார்.

பொருந்தாத வேலை
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி "ஆளுகின்ற அதிமுக அரசின் அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து விடலாம் என்று கணக்கு போட்டு, இதுபோன்ற தேர்தல் நடைமுறைக்குப் பொருந்தாத வேலைகளை செய்து வருகிறார்கள்.

ஆலோசனை
காலையிலிருந்து நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நேரம் அவங்க பதில் தரும் வரை காத்திருப்போம். அப்படி பதில் முறையாக தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்து அதன்படி செயல்படுவோம். இது சம்பந்தமாக கட்சி மேலிடத்திலும் வக்கீல்களிடமும் ஆலோசனை செய்து வழக்கு தொடுக்க முடிவு செய்வோம்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications