கொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
கொரோனா குறித்த செய்தி குறிப்பை தினசரி அடிப்படையில் மாவட்ட வாரியாக வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செ
சென்னை: கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பதற்கான தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான் மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்று திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் 3 வாரத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மனுவில், ஜூலை 5 முதல் 12 வரையிலான முழு ஊரடங்கு உத்தரவோ, அல்லது அரசின் பிற நடவடிக்கைகளோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மதுரையில் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், பிற மாவட்டங்களுக்கு பரவும் என்ற கவலையை அளிப்பதாகவும் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவலை மக்களும், நிபுணர்களும் தெரிந்துகொள்ளாமல் தமிழக அரசு நிறுத்திவைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குறைபாடுடைய மற்றும் மறைக்கப்பட்ட தகவல்களால் கொரோனா நோய் குறித்து பெருத்த சந்தேகத்தை கிளப்பும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டுமே தாக்கம் என்று இல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவியுள்ள நிலையில்,
தமிழகத்தில் ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி செல்வதும், சரக்குகளை பதுக்குவதும், கொரோனா பரப்புவதற்கும் காரணமாகிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் மத்தியில் இருக்கக்கூடிய இப்போதே, தமிழகத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவின் தாக்கத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பதற்கான தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமப்படுத்தி கொள்வது, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது தொகுதி மக்களிடமிருந்து வரும் புகார்களில், மருத்துவமனைகளில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் குணமடைந்தவர்களின் தகவல் ஏதும் இல்லை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். இணையதளத்தில் உள்ள விவரங்களும் தனியார் மருத்துவமனை குறித்த தகவல் மட்டுமே இடம்பெறுவதாகவும் மக்கள் புகார்களில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் கொரோனாவின் எண்ணிக்கையை ஜூன், ஜூலை மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும்போது, கடந்த முன்று மாதங்களாக தமிழக அரசு ஆக்கபூர்வமாகவோ பயனுள்ள வகையிலோ செயல்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா குறித்து மாநில அளவிலான அறிக்கையை தினமும் தமிழக அரசு வெளியிட்டாலும், மாவட்ட வாரியாக செய்யப்பட்ட பரிசோதனைகளை வெளிப்படுத்த அரசு தவறுவதாகவும், அதனால் பாதிப்புகளை ஆயாந்து அறிந்து கொள்ள சிரமமாக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக மேற்கொண்ட சோதனை விவரங்கள், படுக்கைகள்.உள்ள மருத்துவமனைகள், மாதிர்கள் சேகரிக்கும் மையங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிகள் சேமிப்பு மையங்களையும், பரிசோதனை கூடங்களையும் உருவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக 3 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications