முதல்வருடன் நேருக்கு நேர்... விவாதம் நடத்த தயார், ஆனால்... மு.க. ஸ்டாலின் போட்ட ஒரு கண்டிஷன்
சென்னை: தன் மீதான வழக்குக்கு முதல்வர் பெற்ற தடையை வாபஸ் பெற்றால், அவருடன் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குப் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

கூட்டணியை, தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் முடித்துவிட்டன. இதனால் பிரச்சாரத்தை விரைவில் இரண்டு கட்சித் தலைவர்களும் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இந்தியா டுடே குழுமம் சார்பில் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் மீதான வழக்குக்கு முதல்வர் பெற்ற தடையை வாபஸ் பெற்றால், அவருடன் விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் பழனிசாமி குறிக்கும் இடத்தில், குறிக்கும் நேரத்தில் விவாதம் நடத்தத் தயார் என்றும் ஸ்டாலின் பேசினார். முன்னதாக, தன்னுடன் நேரடியாக விவாதம் நடத்த ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சாவல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications