ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டம்.. கஜா சேதம், மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றம்!
திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கஜா புயல் சேதம் குறித்தும், மேகதாது அணை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எல்லாமும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. பாஜக ஏற்கனவே பீகார் கூட்டணிக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.
எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது திமுகவும் இதற்காக களத்தில் இறங்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை நடத்தினார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக கூட்டணி குறித்தும், தேர்தல் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் அளிக்க வேண்டிய வாக்குறுதிகள் பற்றியும் இதில் ஆலோசனை நடத்தினார். பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் பேசினார்கள்.
யார் எல்லாம்
திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மற்ற முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். திமுகவில் புதிதாக இணைந்த செந்தில் பாலாஜியும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார். இன்னும் சில சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்தனர்.
இரண்டும்
அதேபோல் தமிழகத்தில் நடக்க உள்ள 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் இதில் பேசி இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலும் இடைத்தேர்தல் ஒன்றாக வந்தால் என்ன செய்வதும் என்றும் விவாதம் செய்து இருக்கிறார்கள்.
இரண்டு தீர்மானம்
ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஜா சேதத்திற்கு நிவாரணம் வேண்டியும், மேகதாது அணைக்கு எதிராகவும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.