அசைந்து கொடுக்காத போட்டி வேட்பாளர்கள்! தர்மசங்கடத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்! அடுத்தது என்ன?
சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
அவ்வாறு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்கும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பேச்சு நிர்வாகிகள் மத்தியில் எடுபடவில்லை என்பது தான் இப்போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு புறம் தலைமை கொடுக்கும் அழுத்தம் மற்றொருபுறம் போட்டி வேட்பாளர்களின் பிடிவாதம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மறைமுகத் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் மறைமுகத் தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 3-ம் தேதி நண்பகல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் வெளியானது முதலே திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பெரும் தலைவலி உண்டானது. பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள் மாவட்டச் செயலாளர்களிடம் குமுறத் தொடங்கினர்.

மார்ச் 4
இதையடுத்து வெள்ளிக்கிழமை மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நானா நீயா என ஒரு கை பார்த்துவிடுவோம் என திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டிவேட்பாளர்கள் பல இடங்களில் களமிறங்கினர். உடுமலைப்பேட்டை, தேனி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இன்னும் பல நகராட்சிகள் பேரூராட்சிகளில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்று லோக்கலில் தங்களுக்குள்ள செல்வாக்கை நிருபித்தனர்.

ராஜினாமா விவகாரம்
இதனிடையே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்களில் ஒரு சிலர் மட்டும் ராஜினாமா செய்து வருகின்றனர். ஆனால் திமுகவிலேயே அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் பலர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.

தர்ம சங்கடம்
இது தொடர்பாக அவர்களிடம் திமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எந்த ரெஸ்பான்சும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக செலவு செய்த தொகையையும், உழைப்பையும் சுட்டிக்காட்டி போட்டி வேட்பாளர்கள் நியாயம் கேட்பதை ஏற்பதா இல்லை தலைமையின் அறிவுறுத்தல்படி ராஜினாமா செய்ய வைப்பதா என தர்ம சங்கடமான சூழலுக்கு மாவட்டச் செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து
கடலூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இது தொடர்பான பஞ்சாயத்து அதிகம் உள்ளது. இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வெற்றிபெற்ற அதே திமுகவை சேர்ந்த போட்டி வேட்பாளர்களின் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications