அசைந்து கொடுக்காத போட்டி வேட்பாளர்கள்! தர்மசங்கடத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்! அடுத்தது என்ன?
சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
அவ்வாறு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்கும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பேச்சு நிர்வாகிகள் மத்தியில் எடுபடவில்லை என்பது தான் இப்போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு புறம் தலைமை கொடுக்கும் அழுத்தம் மற்றொருபுறம் போட்டி வேட்பாளர்களின் பிடிவாதம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மறைமுகத் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் மறைமுகத் தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 3-ம் தேதி நண்பகல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் வெளியானது முதலே திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பெரும் தலைவலி உண்டானது. பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள் மாவட்டச் செயலாளர்களிடம் குமுறத் தொடங்கினர்.

மார்ச் 4
இதையடுத்து வெள்ளிக்கிழமை மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நானா நீயா என ஒரு கை பார்த்துவிடுவோம் என திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டிவேட்பாளர்கள் பல இடங்களில் களமிறங்கினர். உடுமலைப்பேட்டை, தேனி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இன்னும் பல நகராட்சிகள் பேரூராட்சிகளில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்று லோக்கலில் தங்களுக்குள்ள செல்வாக்கை நிருபித்தனர்.

ராஜினாமா விவகாரம்
இதனிடையே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்களில் ஒரு சிலர் மட்டும் ராஜினாமா செய்து வருகின்றனர். ஆனால் திமுகவிலேயே அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் பலர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.

தர்ம சங்கடம்
இது தொடர்பாக அவர்களிடம் திமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எந்த ரெஸ்பான்சும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக செலவு செய்த தொகையையும், உழைப்பையும் சுட்டிக்காட்டி போட்டி வேட்பாளர்கள் நியாயம் கேட்பதை ஏற்பதா இல்லை தலைமையின் அறிவுறுத்தல்படி ராஜினாமா செய்ய வைப்பதா என தர்ம சங்கடமான சூழலுக்கு மாவட்டச் செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து
கடலூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இது தொடர்பான பஞ்சாயத்து அதிகம் உள்ளது. இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வெற்றிபெற்ற அதே திமுகவை சேர்ந்த போட்டி வேட்பாளர்களின் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
-
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications