Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ - உதாரணத்துடன் புட்டு புட்டு வைத்த செல்வப்பெருந்தகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடத்தி வருகிறது. இந்நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்காத காலம் மாறி, திமுக இப்போது கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளை வழங்கி, சவால் மிகுந்த தொகுதிகளில் அவர்களே நேரடியாக இறங்குவதாக ஸ்டாலினை செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பேசி முடித்த பிறகு எங்களுக்கான விருப்ப தொகுதிகளை கேட்டு பெறுவோம். மிக விரைவில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வருகிறார்.

dmk-congress-alliance-congress-selvaperunthagai-praised-mk-stalin-over-dmk-alliance-strategy

இந்தியா கூட்டணி

எங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரும் வருகிறார்கள். அன்னை சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கடை திறந்து வைத்துள்ளனர். யாரும் வரத்தான் மறுக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது மூழ்கும் கூட்டணி என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் யார் ஏறினாலும் மூழ்கிவிடுவார்கள். அதனால் அங்கு யாரும் செல்வதில்லை. இங்கு எல்லோரும் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க வேண்டும். என்று எங்களுடன் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். அதுதான் எங்களுக்குள் உள்ள வித்தியாசம்.

ஸ்டாலினின் அணுகுமுறை

தமிழ்நாடு மக்கள் தீர்மானித்துவிட்டனர். 210 தொகுதிகளுக்கு மேல் எங்களின் திமுக இந்தியா கூட்டணி வெற்றி பெறும். முதலமைச்சரின் தேர்தல் அனுபவம் எனக்கு தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை போட்டியிட்டார். நாங்கள் திண்டுக்கல் கேட்டோம்.

திமுகவுக்கும் திண்டுக்கலுக்கு ஓகே சொல்லிவிட்டனர். ஆனால் அண்ணாமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்தனர். எனக்கு ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். கூட்டணி கட்சிகளுக்கு பாரம் கொடுக்க விடக்கூடாது என்று திமுகவே நேரடியாக பாரத்தை ஏற்றுக் கொண்டது. அங்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் என்பவரை வேட்பாளராக்கினார்கள்.

படுத்துக் கொண்டே எளிதாக வெற்றி பெறும் திண்டுக்கல் தொகுதியை கம்யூனிஸ்ட்டுக்கு கொடுத்தனர். இதுதான் முதலமைச்சரின் வரலாறு. அவரின் பார்வையை நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். முன்பெல்லாம் வெற்றி பெறும் தொகுதிகளை கொடுப்பதற்கு தயங்குவார்கள். இப்போது அப்படியில்லை. பிரச்சனை உள்ள இடங்களில் ஸ்டாலினே சமாளிக்க தயாராக உள்ளார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+