‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ - உதாரணத்துடன் புட்டு புட்டு வைத்த செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடத்தி வருகிறது. இந்நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்காத காலம் மாறி, திமுக இப்போது கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளை வழங்கி, சவால் மிகுந்த தொகுதிகளில் அவர்களே நேரடியாக இறங்குவதாக ஸ்டாலினை செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பேசி முடித்த பிறகு எங்களுக்கான விருப்ப தொகுதிகளை கேட்டு பெறுவோம். மிக விரைவில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வருகிறார்.

இந்தியா கூட்டணி
எங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரும் வருகிறார்கள். அன்னை சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கடை திறந்து வைத்துள்ளனர். யாரும் வரத்தான் மறுக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது மூழ்கும் கூட்டணி என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் யார் ஏறினாலும் மூழ்கிவிடுவார்கள். அதனால் அங்கு யாரும் செல்வதில்லை. இங்கு எல்லோரும் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க வேண்டும். என்று எங்களுடன் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். அதுதான் எங்களுக்குள் உள்ள வித்தியாசம்.
ஸ்டாலினின் அணுகுமுறை
தமிழ்நாடு மக்கள் தீர்மானித்துவிட்டனர். 210 தொகுதிகளுக்கு மேல் எங்களின் திமுக இந்தியா கூட்டணி வெற்றி பெறும். முதலமைச்சரின் தேர்தல் அனுபவம் எனக்கு தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை போட்டியிட்டார். நாங்கள் திண்டுக்கல் கேட்டோம்.
திமுகவுக்கும் திண்டுக்கலுக்கு ஓகே சொல்லிவிட்டனர். ஆனால் அண்ணாமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்தனர். எனக்கு ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். கூட்டணி கட்சிகளுக்கு பாரம் கொடுக்க விடக்கூடாது என்று திமுகவே நேரடியாக பாரத்தை ஏற்றுக் கொண்டது. அங்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் என்பவரை வேட்பாளராக்கினார்கள்.
படுத்துக் கொண்டே எளிதாக வெற்றி பெறும் திண்டுக்கல் தொகுதியை கம்யூனிஸ்ட்டுக்கு கொடுத்தனர். இதுதான் முதலமைச்சரின் வரலாறு. அவரின் பார்வையை நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். முன்பெல்லாம் வெற்றி பெறும் தொகுதிகளை கொடுப்பதற்கு தயங்குவார்கள். இப்போது அப்படியில்லை. பிரச்சனை உள்ள இடங்களில் ஸ்டாலினே சமாளிக்க தயாராக உள்ளார்" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications