கறார் கனிமொழி.. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. என்னவாகும் திமுக காங்கிரஸ் கூட்டணி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. கூட்டணி தொடர்பாக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவுகளை கறார் மொழியில் கனிமொழி சொன்னதை கேட்டு காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளதாம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் முதல் ஆளாக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்தது காங்கிரஸ் கட்சி தான். ஆட்சியில், பங்கு அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் சைலன்டாக தர்மயுத்தம் நடத்தினார்கள். தவெகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் காங்கிரஸ் கட்சியில் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி மதில் மேல் பூனையாக உள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஒரு வழியாக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை உருவாக்கிவிட்டது. தங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் திமுக நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. தொகுதி பங்கீடு, சின்னம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது வருகிறது.
ஆனால் குழுவை உருவாக்குங்கள் என்று சொன்ன காங்கிரஸ் நேரடியாக திமுக மேலிடத்திடம் பேச தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சந்தித்தார். அதேபோல திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
ஸ்டாலின் அதிரடி முடிவு
அப்போது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை சோடங்கர் கனிமொழியிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு திமுகவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி ஸ்ட்ரிக்டாக பதில் அளித்துவிட்டாராம். 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே காங்கிரஸ் தற்போது, திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு சட்டமன்ற தொகுதி என 39 தொகுதிகளை கேட்கிறதாம்.
அதனுடன் ராஜ்யசபா தொகுதியையும் கேட்கிறார்களாம். ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக சொல்லிவிட்டதால் அந்த கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. அதேநேரத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இருப்பினும் திமுக தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்களாம்.
கனிமொழி கறார்
"காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போல, இப்போதும் 25 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். மாநிலங்களவை பற்றி பரிசீலிக்கிறோம். கூட்டணியில் புதிதாக மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் நாங்கள் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். எனவே நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது" என்று ஸ்டாலின் சொல்லியுள்ளதாக கனிமொழி கறாராக கூறிவிட்டாராம்.
இதைக் கேட்ட சோடங்கர் அதிர்ச்சியாகியுள்ளார். வேண்டுமென்றால் 2-3 தொகுதிகள் கூடுதலாக வழங்கலாம். ஆனால் 39 தொகுதிகள் வாய்ப்பே இல்லை என சொல்லிவிட்டார்களாம். இனி காங்கிரஸ் கட்சி தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியில் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications